Friday, February 18, 2011
Wednesday, February 16, 2011
தோழர் கி. வீரமணி எழுதிய ‘விடுதலைப் போரும் திராவிடர் இயக்கமும்: உண்மை வரலாறு
வர்க்கமா ? வர்ணமா ? இந்தச் சர்ச்சை கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும், திராவிட இயக்கத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நடந்து வந்தது; இப்போதும் ஓரளவுக்கு நடந்து வருகிறது. வர்க்க வேறுபாடு, வர்ண (சாதி) வேறுபாடு ஆகிய இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டியவைதான். ஆனால் எதற்கு முதல் முன்னுரிமை தரவேண்டும் என்பது பற்றி இரண்டு இயக்கங்களுக்கும் இடையில் தீவிரமான கருத்து மோதல்கள் நடந்து வந்தன.
“திராவிட இயக்கத்தினர் வர்க்கப் போராட்டத்தைக் குலைப்பவர்கள்; ஆளுகிற பணக்கார வர்க்கத்தை ஆதரிப்பவர்கள் ” என்ற பார்வை மட்டும்தான் கம்யூனிஸ்ட்டுகளிடம் பெரும்பாலும் இருந்தது. அதே போல “கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் சாதி எதிர்ப்புப் போராட்டத்தைக் குலைப்பவர்கள்; பார்ப்பனர்களை ஆதரிப்பவர்கள்” என்ற பார்வை மட்டும் தான் திராவிட இயக்கத்தினரிடம் பெரும்பாலும் இருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் 1986ஆம் ஆண்டு அவரை நான் சந்தித்தேன்.
அவர்?சின்னக்குத்தூசி என்ற இரா. தியாகராசன். மூத்த பத்திரிகையாளர். திராவிட இயக்கத்தின் தகவல் களஞ்சியம். அடிப்படையில் அவர் ஒரு பெரியாரிஸ்ட். அரசியலில் கலைஞரின் உறுதியான ஆதரவாளர். அனைத்துக்கும் மேலாக மிகச் சிறந்த மனிதர். அவருடனும் நான் திராவிட இயக்கம் பற்றி விவாதிக்க நேர்ந்தது. திராவிட இயக்கத்தின் மீது நான் விமர்சனங்களை வைத்தேன். அதற்கு பதில் அளித்த சின்னக் குத்தூசியாரோ நான் கேள்விப்பட்டிராத, சிந்தித்திராத ஏராளமான விவரங்களையும் விஷயங்களையும் கொட்டிக் குவித்தார்.
“ஆஹா! இவரிடம் விவாதிக்க வேண்டுமானால் நாம் இன்னும் நிறைய விவரங்களைத் தெரிந்து கொண்டுதான் விவாதிக்க வேண்டும்” என்று நான் உஷாராகி விட்டேன்! உடனே திராவிட இயக்கம் பற்றி ‘விழுந்து விழுந்து’ படிக்கத் தொடங்கினேன். தொடங்கிய புத்தகங்களே சர்ச்சைக்குரிய புத்தகங்களாக அமைந்து விட்டன!
ஒன்று, மார்க்ஸிஸ்ட் கட்சித் தலைவர் மறைந்த தோழர் பி. ராமமூர்த்தி எழுதிய ‘ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் ’ என்ற புத்தகம். 1983 ம் ஆண்டு வெளியானது.
மற்றொன்று, இந்தப் புத்தகத்திற்குப் பதிலளித்து திராவிடர் கழகத்தின் அன்றைய பொதுச்செயலாளரும், இன்றைய தலைவருமான தோழர் கி. வீரமணி ஆற்றிய விமர்சனச் சொற்பொழிவின் தொகுப்பான ‘ விடுதலைப் போரும் திராவிடர் இயக்கமும் உண்மை வரலாறு ’ என்ற புத்தகம். 1985ம் ஆண்டு வெளியானது.
தோழர் பி. ராமமூர்த்தி தனது புத்தகத்தில் பெரியாரைப் பற்றிக் குறிப்படும்போது “ இந்தக் காலகட்டத்தில் தோன்றிய சமூக சீர்திருத்தவாதிகளில் பெரியார் ராமசாமி தலைசிறந்தவர் என்பதில் ஐயமில்லை. குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர், தீண்டப்படாதவர் என்று கூறப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் தன்மான உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பி, நிமிர்ந்து நின்று தங்களுடைய சமூக உரிமைகளுக்காகப் போராடச் செய்தவர்களில் சிறந்தவர் என்பதில் ஐயமில்லை. . . ” என்று குறிப்பிட்டு விட்டு, ஒரு சில மென்மையான விமர்சனங்களை முன்வைக்கிறார். மற்றபடி, நீதிக்கட்சி தொடங்கி அ. தி. மு. க வரையிலான திராவிட இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்.
இந்த விமர்சனங்களுக்குத் தோழர் கி. விரமணி தனது புத்தகத்தில் பதில் அளிக்கிறார். தோழர் பி. ராமமூர்த்தியின் சில விமர்சனங்களுக்கு வலுவான, திருப்திகரமான மறுப்புகளை தோழர் கி. வீரமணி அளிக்கிறார். சில விமர்சனங்களுக்குத் திருப்திகரமற்ற மறுப்புகளை அளிக்கிறார். மீதியுள்ள சில விமர்சனங்களுக்கு மறுப்புகளை அளிக்கவில்லை.
என்னைப் பொருத்தவரையில் திராவிட இயக்கம் பற்றிப் பெரும்பாலும் எதிர்மறையான கண்ணோட்டம் தான் அப்போது இருந்தது. ஆனால் தோழர் கி. வீரமணியின் இந்தப் புத்தகத்தைப் படித்ததும் நான் மலைத்துப் போனேன்!
“தோழர் பி. ராமமூர்த்தியின் பல விமர்சனங்கள் சரியாகவே இருந்த போதும், அவற்றுக்கு அப்பாற்பட்டு திராவிட இயக்கத்துக்கு இவ்வளவு சிறப்புகள் உள்ளனவா! அதிலும், பெரியார் இவ்வளவு அதிசயிக்கத்தக்க தலைவரா!” என்று வியந்து போனேன். திராவிட இயக்கம் பற்றிய, குறிப்பாக பெரியார் பற்றிய எனது கண்ணோட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது இந்தப்புத்தகம்.
புத்தகத்தின் ஆசிரியர் ‘ஆசிரியர்’! ஆமாம்! தோழர் கி. வீரமணியை ‘ஆசிரியர்’ என்றே திராவிடர் கழகத்தினரும் ஆதரவாளர்களும் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கிறார்கள். அவர் தனது பத்தாவது வயதிலேயே மேடையேறி பகுத்தறிவுச் சொற்பொழிவு ஆற்றி ‘பத்து வயதுப் பகுத்தறிவுச் சிறுவன்’ என்று பாராட்டப்பட்டவர்.
கடலூரில் 1944 ம் ஆண்டில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் பெரியார், அண்ணா முன்னிலையில் மேடையில் பேசினார் பத்து வயது வீரமணி. அண்ணா பேசியபோது “இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தராக ஆக்கியிருப்பார்கள். இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்பது தெரிகிறது” என்று பாராட்டினார். அதைக்கேட்ட பெரியார் பலமாகச் சிரித்தார். மாநாட்டுப் பந்தல் அதிரக் கையொலி! அப்போது தொடங்கிய பகுத்தறிவுப் பிரச்சாரம் 65 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் தொடர்கிறது. பெரியாரின் விருப்பப்படி, 1968 ம் ஆண்டில், தோழர் வீரமணி விடுதலை நாளிதழின் ஆசிரியராகவும், திராவிடர் கழகத்தின் முழுநேர ஊழியராகவும் ஆனார்.
“இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி, திரு. வீரமணி அவர்க ளை மனதார வரவேற்பதோடு, கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று பெரியார் அறிக்கை வெளியிட்டார்.
பெரியார், மணியம்மையார் ஆகியோருக்குப் பிறகு, திராவிடர் கழகத்தின் தலைவராகவும் மற்றும் பல சார்பு அமைப்புகளின், கல்வி நிலையங்களின், பொறுப்பாளராகவும் இருந்து தோழர் வீரமணி பணியாற்றி வருகிறார். இதுவரை 75க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். தனது பொதுவாழ்வில், போராட்ட வாழ்வில் இதுவரை 38 முறை கைதாகி இருக்கிறார். நெருக்கடி நிலை காலத்தில் ‘மிசா ’ கைதியாக ஓராண்டு சிறையில் இருந்தார். முன்பு, தோழர் வீரமணி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது, கட்டணம் செலுத்த வசதியில்லை. மிகுந்த தயக்கத்துடன் பெரியாரிடம் ‘கடன்’ உதவி கேட்டுக் கடிதம் எழுதினார். பெரியாரோ நன்கொடையாகவே அவருக்குப் பணத்தை அனுப்பி வைத்தார்.
இதுபற்றி தோழர் வீரமணி சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது வருமாறு:
“அய்யாவுக்கு நான் வாழ்நாள் முழுவதும் அந்தக் கடனை அடைக்கவே என் இறுதி மூச்சு அடங்கும் வரை உழைப்பது என்று உறுதிகொண்ட நிலையில் உழைக்கிறேன். ஆனால், அடைக்கத் தான் முடியவில்லை” அந்தக் ‘கடன் அடைக்கும் தொண்டு’ தொடர்கிறது.
‘விடுதலைப் போரும் திராவிடர் இயக்கமும்: உண்மை வரலாறு’ என்ற இந்தப் புத்தகத்தில் முக்கியமாக நீதிக்கட்சி, பெரியார், அண்ணா பற்றி தோழர் வீரமணி விரிவாக விளக்குகிறார்.
1. நீதிக்கட்சி:
நீதிக்கட்சி 1916 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அதனுடைய கொள்கை அறிக்கையிலிருந்து விரிவான விவரங்கள் இந்தப் புத்தகத்தில் அளிக்கப்படுகின்றன. அன்றைக்கு இருந்த நிலைமையைப் படித்துப் பார்த்தால் ‘பகீர்’ என்கிறது. அன்றைய சென்னை மாகாணத்தின் மக்கள் தொகையில் 100க்கு 3 பங்கு என்ற அளவில் இருந்த பிராமணர்கள், அரசாங்க அலுவல்களிலும், நீதித்துறையிலும், பொது நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் ஏறத்தாழ 100க்கு 80 பங்கு என்ற அளவில் பதவிகளையும், இடங்களையும் கைப்பற்றி இருந்தார்கள் என்பதற்கான புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது திகைப்பாக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியிலும் கூட அனைத்திந்திய காங்கிரஸ் குழுவுக்குச் சென்னை மாகாண உறுப்பினர்களாக 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனுப்பப்பட்டார்கள். அவர்களில் ஒருவரைத் தவிர ஏனையோர் அனைவரும் பிராமணர்களே! எனவே பிராமணர் அல்லாதாரும் முன்னேற வேண்டும்; அதற்காக உரிய இடஒதுக்கீடும், வாய்ப்பு வசதிகளும் அளிக்கப்படவேண்டும் என்று நீதிக்கட்சியின் அறிக்கை கூறியது. இதற்கேற்பவே நீதிக்கட்சியின் செயல்பாடுகளும் அமைந்தன.
நீதிக்கட்சி 1916ல் தொடங்கப்பட்டு 1920ல் ஆட்சிக்கு வந்தது. அடுத்த ஆண்டே 1921ல் பெண்களுக்கும் வாக்குரிமை அளித்துச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டில் அரசாங்கப் பதவிகளில் பிராமணர் அல்லாதாருக்கு இட ஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பித்தது. பின்னர் கோவில் சொத்துகள் கொள்ளை போவதைத் தடுக்கவும், சிறு குழுவினரின் ஆதிக்கத்தை அகற்றவும், இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. கல்வித் துறையிலும் பிராமணர் அல்லாதார் பயன்பெற ஆணைகளைப் பிறப்பித்தது. தொழில், தொழிலாளர் மேம்பாட்டுக்காகவும் நடவடிக்கைகளை எடுத்தது.
2. பெரியார்:
அநேகமாகப் பெரியாரின் அனைத்துப் பரிமாணங்களையுமே இந்தப் புத்தகத்தில் தோழர் வீரமணி அளித்து விடுகிறார். வரலாற்று விவரங்களைக் கொட்டிக் குவிக்கிறார். பிராமணர் அல்லாதார் சுய மரியாதை பெறவும், வகுப்புரிமை பெறவும், சமூகம், அரசியல், பண்பாடு என்று அனைத்துத் துறைகளிலும் பெரியார் நடத்திய நீண்ட நெடிய போராட்டங்களை, பிரச்சாரங்களை, செய்த தியாகங்களை அடுக்கடுக்காக அளிக்கிறார். “பெரியார் தனது பொதுவாழ்வில் 21 முறை சிறை சென்று, சிறைப் பறவையாகவே வாழ்ந்து காட்டிய வீரச் சிங்கம்” என்று விவரிக்கிறார்.
3. அண்ணா :
பெரியாரின் துணைவராக அண்ணா ஆற்றிய பணிகள், செய்த பிரச்சாரங்கள், எழுதிய நூல்கள் பற்றி விரிவான மேற்கோள்களுடன் தோழர் வீரமணி விளக்குகிறார். அண்ணா முதலமைச்சரான பிறகு, சுயமரியாதைத் திருமணச் சட்ட மசோதாவைத் தயாரித்து, பெரியாரின் கருத்தைக் கேட்டு அனுப்பியதையும், அதில் பெரியார் செய்த சிறப்பான திருத்தத்தைப் பற்றியும் சுவைபட விவரிக்கிறார். இப்போது இந்தப் புத்தகத்தில் தோழர் வீரமணி தெரிவிக்கும் ஒரு சுவையான சம்பவத்தின் சுருக்கத்தைப் பார்ப்போம்.
சர். ஏ. டி. பன்னீர்ச் செல்வமும், தமிழவேள் உமாமகேசுவரனும் காந்தியைச் சந்தித்தார்கள். காந்தியாரிடம் அவர்கள் பேசியபோது, “தமிழகத்தில் பிராமணர் பிராமணர் அல்லாதார் பிரச்சினை தீவிரமாகிக் கொண்டு இருக்கிறது. அதை நீங்கள் தலையிட்டுத் தீர்த்து வைத்தால் என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்குக் காந்தியார் சொன்னார், “இதை என்னிடத்தில் நீண்ட காலத்திற்கு முன்னாலேயே ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கர் (பெரியார்) வந்து சொன்னார். ஆனால் நான் மறுபடியும் கேட்டபொழுது, வரதராஜுலு நாயுடு போன்றவர்கள் ‘நீங்கள் தலையிட வேண்டாம். அது தானாகவே மறைந்து போய்விடும்’ என்று சொல்லிவிட்டார்கள்” என்றார். மேலும் “இப்பொழுது முன்போல பிராமணர் - பிராமணர்அல்லாதார் என்பது ஒரு பிரச்சினையாக இல்லை” என்றார் காந்தியார்.
உடனே பன்னீர்செல்வம் “அப்படியா ? நீங்கள் எதை ஆதாரமாக வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்?” என்று கேட்டார். இதற்குக் காந்தியார் அளித்த பதில், பெரியாரின் சுயமரியாதை இயக்கம், காந்தி போன்றவர்களுக்கே சமூகத்தில் எப்படிப்பட்ட அந்தஸ்த்தையும், மரியாதையையும் தேடித்தந்தது என்பதை விளக்குவதாக இருந்தது.
காந்தியார் சொன்னார் “பார்ப்பனர் இப்பொழுது மாறிவிட்டார்கள். முன்பு போல் இல்லை. முன்பெல்லாம் நான் மயிலாப்பூரில் சீனிவாச அய்யங்கார் வீட்டில் வந்து தங்கினால், என்னைத் திண்ணையில்தான் உட்கார வைப்பது வழக்கம். ஆனால் இப்பொழுது நானும் என் மனைவி கஸ்தூரியும் அவர்கள் வீட்டுச் சமையலறை வரையில் போகிறோம்”
இது 1927க்குப் பிறகு நடந்த ஒரு நிகழ்ச்சியாகும். இது தந்தை பெரியார் அவர்கள் 1925ம் ஆண்டு துவங்கிய சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம்தானே! எனவே, தாழ்த்தப்பட்ட சகோதரர்களை வைக்கம் தெருக்களிலே நடமாட உரிமை பெற்றவர்களாக மாற்றியது மட்டுமல்ல பெரியாரின் தொண்டு! மகாத்மா காந்தியையும், சீனிவாச அய்யங்கார் வீட்டுக்குள் அழைத்துச் சென்ற மாபெரும் தொண்டு பெரியாரின் தொண்டு, தத்துவம்!அடுத்து நாம் பார்க்கப் போவது, இந்து சமூகத்தின் அனைத்து ஒடுக்குமுறை அம்சங்களுக்கும் எதிரான கலகத்தின் சின்னமாக விளங்கிய சிங்கத்தின் புத்தகம்
கருஞ்சட்டைத் தமிழர் நவம்பர்1-09
“திராவிட இயக்கத்தினர் வர்க்கப் போராட்டத்தைக் குலைப்பவர்கள்; ஆளுகிற பணக்கார வர்க்கத்தை ஆதரிப்பவர்கள் ” என்ற பார்வை மட்டும்தான் கம்யூனிஸ்ட்டுகளிடம் பெரும்பாலும் இருந்தது. அதே போல “கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் சாதி எதிர்ப்புப் போராட்டத்தைக் குலைப்பவர்கள்; பார்ப்பனர்களை ஆதரிப்பவர்கள்” என்ற பார்வை மட்டும் தான் திராவிட இயக்கத்தினரிடம் பெரும்பாலும் இருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் 1986ஆம் ஆண்டு அவரை நான் சந்தித்தேன்.
அவர்?சின்னக்குத்தூசி என்ற இரா. தியாகராசன். மூத்த பத்திரிகையாளர். திராவிட இயக்கத்தின் தகவல் களஞ்சியம். அடிப்படையில் அவர் ஒரு பெரியாரிஸ்ட். அரசியலில் கலைஞரின் உறுதியான ஆதரவாளர். அனைத்துக்கும் மேலாக மிகச் சிறந்த மனிதர். அவருடனும் நான் திராவிட இயக்கம் பற்றி விவாதிக்க நேர்ந்தது. திராவிட இயக்கத்தின் மீது நான் விமர்சனங்களை வைத்தேன். அதற்கு பதில் அளித்த சின்னக் குத்தூசியாரோ நான் கேள்விப்பட்டிராத, சிந்தித்திராத ஏராளமான விவரங்களையும் விஷயங்களையும் கொட்டிக் குவித்தார்.
“ஆஹா! இவரிடம் விவாதிக்க வேண்டுமானால் நாம் இன்னும் நிறைய விவரங்களைத் தெரிந்து கொண்டுதான் விவாதிக்க வேண்டும்” என்று நான் உஷாராகி விட்டேன்! உடனே திராவிட இயக்கம் பற்றி ‘விழுந்து விழுந்து’ படிக்கத் தொடங்கினேன். தொடங்கிய புத்தகங்களே சர்ச்சைக்குரிய புத்தகங்களாக அமைந்து விட்டன!
ஒன்று, மார்க்ஸிஸ்ட் கட்சித் தலைவர் மறைந்த தோழர் பி. ராமமூர்த்தி எழுதிய ‘ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் ’ என்ற புத்தகம். 1983 ம் ஆண்டு வெளியானது.
மற்றொன்று, இந்தப் புத்தகத்திற்குப் பதிலளித்து திராவிடர் கழகத்தின் அன்றைய பொதுச்செயலாளரும், இன்றைய தலைவருமான தோழர் கி. வீரமணி ஆற்றிய விமர்சனச் சொற்பொழிவின் தொகுப்பான ‘ விடுதலைப் போரும் திராவிடர் இயக்கமும் உண்மை வரலாறு ’ என்ற புத்தகம். 1985ம் ஆண்டு வெளியானது.
தோழர் பி. ராமமூர்த்தி தனது புத்தகத்தில் பெரியாரைப் பற்றிக் குறிப்படும்போது “ இந்தக் காலகட்டத்தில் தோன்றிய சமூக சீர்திருத்தவாதிகளில் பெரியார் ராமசாமி தலைசிறந்தவர் என்பதில் ஐயமில்லை. குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர், தீண்டப்படாதவர் என்று கூறப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் தன்மான உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பி, நிமிர்ந்து நின்று தங்களுடைய சமூக உரிமைகளுக்காகப் போராடச் செய்தவர்களில் சிறந்தவர் என்பதில் ஐயமில்லை. . . ” என்று குறிப்பிட்டு விட்டு, ஒரு சில மென்மையான விமர்சனங்களை முன்வைக்கிறார். மற்றபடி, நீதிக்கட்சி தொடங்கி அ. தி. மு. க வரையிலான திராவிட இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்.
இந்த விமர்சனங்களுக்குத் தோழர் கி. விரமணி தனது புத்தகத்தில் பதில் அளிக்கிறார். தோழர் பி. ராமமூர்த்தியின் சில விமர்சனங்களுக்கு வலுவான, திருப்திகரமான மறுப்புகளை தோழர் கி. வீரமணி அளிக்கிறார். சில விமர்சனங்களுக்குத் திருப்திகரமற்ற மறுப்புகளை அளிக்கிறார். மீதியுள்ள சில விமர்சனங்களுக்கு மறுப்புகளை அளிக்கவில்லை.
என்னைப் பொருத்தவரையில் திராவிட இயக்கம் பற்றிப் பெரும்பாலும் எதிர்மறையான கண்ணோட்டம் தான் அப்போது இருந்தது. ஆனால் தோழர் கி. வீரமணியின் இந்தப் புத்தகத்தைப் படித்ததும் நான் மலைத்துப் போனேன்!
“தோழர் பி. ராமமூர்த்தியின் பல விமர்சனங்கள் சரியாகவே இருந்த போதும், அவற்றுக்கு அப்பாற்பட்டு திராவிட இயக்கத்துக்கு இவ்வளவு சிறப்புகள் உள்ளனவா! அதிலும், பெரியார் இவ்வளவு அதிசயிக்கத்தக்க தலைவரா!” என்று வியந்து போனேன். திராவிட இயக்கம் பற்றிய, குறிப்பாக பெரியார் பற்றிய எனது கண்ணோட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது இந்தப்புத்தகம்.
புத்தகத்தின் ஆசிரியர் ‘ஆசிரியர்’! ஆமாம்! தோழர் கி. வீரமணியை ‘ஆசிரியர்’ என்றே திராவிடர் கழகத்தினரும் ஆதரவாளர்களும் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கிறார்கள். அவர் தனது பத்தாவது வயதிலேயே மேடையேறி பகுத்தறிவுச் சொற்பொழிவு ஆற்றி ‘பத்து வயதுப் பகுத்தறிவுச் சிறுவன்’ என்று பாராட்டப்பட்டவர்.
கடலூரில் 1944 ம் ஆண்டில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் பெரியார், அண்ணா முன்னிலையில் மேடையில் பேசினார் பத்து வயது வீரமணி. அண்ணா பேசியபோது “இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தராக ஆக்கியிருப்பார்கள். இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்பது தெரிகிறது” என்று பாராட்டினார். அதைக்கேட்ட பெரியார் பலமாகச் சிரித்தார். மாநாட்டுப் பந்தல் அதிரக் கையொலி! அப்போது தொடங்கிய பகுத்தறிவுப் பிரச்சாரம் 65 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் தொடர்கிறது. பெரியாரின் விருப்பப்படி, 1968 ம் ஆண்டில், தோழர் வீரமணி விடுதலை நாளிதழின் ஆசிரியராகவும், திராவிடர் கழகத்தின் முழுநேர ஊழியராகவும் ஆனார்.
“இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி, திரு. வீரமணி அவர்க ளை மனதார வரவேற்பதோடு, கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று பெரியார் அறிக்கை வெளியிட்டார்.
பெரியார், மணியம்மையார் ஆகியோருக்குப் பிறகு, திராவிடர் கழகத்தின் தலைவராகவும் மற்றும் பல சார்பு அமைப்புகளின், கல்வி நிலையங்களின், பொறுப்பாளராகவும் இருந்து தோழர் வீரமணி பணியாற்றி வருகிறார். இதுவரை 75க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். தனது பொதுவாழ்வில், போராட்ட வாழ்வில் இதுவரை 38 முறை கைதாகி இருக்கிறார். நெருக்கடி நிலை காலத்தில் ‘மிசா ’ கைதியாக ஓராண்டு சிறையில் இருந்தார். முன்பு, தோழர் வீரமணி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது, கட்டணம் செலுத்த வசதியில்லை. மிகுந்த தயக்கத்துடன் பெரியாரிடம் ‘கடன்’ உதவி கேட்டுக் கடிதம் எழுதினார். பெரியாரோ நன்கொடையாகவே அவருக்குப் பணத்தை அனுப்பி வைத்தார்.
இதுபற்றி தோழர் வீரமணி சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது வருமாறு:
“அய்யாவுக்கு நான் வாழ்நாள் முழுவதும் அந்தக் கடனை அடைக்கவே என் இறுதி மூச்சு அடங்கும் வரை உழைப்பது என்று உறுதிகொண்ட நிலையில் உழைக்கிறேன். ஆனால், அடைக்கத் தான் முடியவில்லை” அந்தக் ‘கடன் அடைக்கும் தொண்டு’ தொடர்கிறது.
‘விடுதலைப் போரும் திராவிடர் இயக்கமும்: உண்மை வரலாறு’ என்ற இந்தப் புத்தகத்தில் முக்கியமாக நீதிக்கட்சி, பெரியார், அண்ணா பற்றி தோழர் வீரமணி விரிவாக விளக்குகிறார்.
1. நீதிக்கட்சி:
நீதிக்கட்சி 1916 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அதனுடைய கொள்கை அறிக்கையிலிருந்து விரிவான விவரங்கள் இந்தப் புத்தகத்தில் அளிக்கப்படுகின்றன. அன்றைக்கு இருந்த நிலைமையைப் படித்துப் பார்த்தால் ‘பகீர்’ என்கிறது. அன்றைய சென்னை மாகாணத்தின் மக்கள் தொகையில் 100க்கு 3 பங்கு என்ற அளவில் இருந்த பிராமணர்கள், அரசாங்க அலுவல்களிலும், நீதித்துறையிலும், பொது நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் ஏறத்தாழ 100க்கு 80 பங்கு என்ற அளவில் பதவிகளையும், இடங்களையும் கைப்பற்றி இருந்தார்கள் என்பதற்கான புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது திகைப்பாக இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியிலும் கூட அனைத்திந்திய காங்கிரஸ் குழுவுக்குச் சென்னை மாகாண உறுப்பினர்களாக 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனுப்பப்பட்டார்கள். அவர்களில் ஒருவரைத் தவிர ஏனையோர் அனைவரும் பிராமணர்களே! எனவே பிராமணர் அல்லாதாரும் முன்னேற வேண்டும்; அதற்காக உரிய இடஒதுக்கீடும், வாய்ப்பு வசதிகளும் அளிக்கப்படவேண்டும் என்று நீதிக்கட்சியின் அறிக்கை கூறியது. இதற்கேற்பவே நீதிக்கட்சியின் செயல்பாடுகளும் அமைந்தன.
நீதிக்கட்சி 1916ல் தொடங்கப்பட்டு 1920ல் ஆட்சிக்கு வந்தது. அடுத்த ஆண்டே 1921ல் பெண்களுக்கும் வாக்குரிமை அளித்துச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டில் அரசாங்கப் பதவிகளில் பிராமணர் அல்லாதாருக்கு இட ஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பித்தது. பின்னர் கோவில் சொத்துகள் கொள்ளை போவதைத் தடுக்கவும், சிறு குழுவினரின் ஆதிக்கத்தை அகற்றவும், இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. கல்வித் துறையிலும் பிராமணர் அல்லாதார் பயன்பெற ஆணைகளைப் பிறப்பித்தது. தொழில், தொழிலாளர் மேம்பாட்டுக்காகவும் நடவடிக்கைகளை எடுத்தது.
2. பெரியார்:
அநேகமாகப் பெரியாரின் அனைத்துப் பரிமாணங்களையுமே இந்தப் புத்தகத்தில் தோழர் வீரமணி அளித்து விடுகிறார். வரலாற்று விவரங்களைக் கொட்டிக் குவிக்கிறார். பிராமணர் அல்லாதார் சுய மரியாதை பெறவும், வகுப்புரிமை பெறவும், சமூகம், அரசியல், பண்பாடு என்று அனைத்துத் துறைகளிலும் பெரியார் நடத்திய நீண்ட நெடிய போராட்டங்களை, பிரச்சாரங்களை, செய்த தியாகங்களை அடுக்கடுக்காக அளிக்கிறார். “பெரியார் தனது பொதுவாழ்வில் 21 முறை சிறை சென்று, சிறைப் பறவையாகவே வாழ்ந்து காட்டிய வீரச் சிங்கம்” என்று விவரிக்கிறார்.
3. அண்ணா :
பெரியாரின் துணைவராக அண்ணா ஆற்றிய பணிகள், செய்த பிரச்சாரங்கள், எழுதிய நூல்கள் பற்றி விரிவான மேற்கோள்களுடன் தோழர் வீரமணி விளக்குகிறார். அண்ணா முதலமைச்சரான பிறகு, சுயமரியாதைத் திருமணச் சட்ட மசோதாவைத் தயாரித்து, பெரியாரின் கருத்தைக் கேட்டு அனுப்பியதையும், அதில் பெரியார் செய்த சிறப்பான திருத்தத்தைப் பற்றியும் சுவைபட விவரிக்கிறார். இப்போது இந்தப் புத்தகத்தில் தோழர் வீரமணி தெரிவிக்கும் ஒரு சுவையான சம்பவத்தின் சுருக்கத்தைப் பார்ப்போம்.
சர். ஏ. டி. பன்னீர்ச் செல்வமும், தமிழவேள் உமாமகேசுவரனும் காந்தியைச் சந்தித்தார்கள். காந்தியாரிடம் அவர்கள் பேசியபோது, “தமிழகத்தில் பிராமணர் பிராமணர் அல்லாதார் பிரச்சினை தீவிரமாகிக் கொண்டு இருக்கிறது. அதை நீங்கள் தலையிட்டுத் தீர்த்து வைத்தால் என்ன?” என்று கேட்டார்கள்.
அதற்குக் காந்தியார் சொன்னார், “இதை என்னிடத்தில் நீண்ட காலத்திற்கு முன்னாலேயே ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கர் (பெரியார்) வந்து சொன்னார். ஆனால் நான் மறுபடியும் கேட்டபொழுது, வரதராஜுலு நாயுடு போன்றவர்கள் ‘நீங்கள் தலையிட வேண்டாம். அது தானாகவே மறைந்து போய்விடும்’ என்று சொல்லிவிட்டார்கள்” என்றார். மேலும் “இப்பொழுது முன்போல பிராமணர் - பிராமணர்அல்லாதார் என்பது ஒரு பிரச்சினையாக இல்லை” என்றார் காந்தியார்.
உடனே பன்னீர்செல்வம் “அப்படியா ? நீங்கள் எதை ஆதாரமாக வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்?” என்று கேட்டார். இதற்குக் காந்தியார் அளித்த பதில், பெரியாரின் சுயமரியாதை இயக்கம், காந்தி போன்றவர்களுக்கே சமூகத்தில் எப்படிப்பட்ட அந்தஸ்த்தையும், மரியாதையையும் தேடித்தந்தது என்பதை விளக்குவதாக இருந்தது.
காந்தியார் சொன்னார் “பார்ப்பனர் இப்பொழுது மாறிவிட்டார்கள். முன்பு போல் இல்லை. முன்பெல்லாம் நான் மயிலாப்பூரில் சீனிவாச அய்யங்கார் வீட்டில் வந்து தங்கினால், என்னைத் திண்ணையில்தான் உட்கார வைப்பது வழக்கம். ஆனால் இப்பொழுது நானும் என் மனைவி கஸ்தூரியும் அவர்கள் வீட்டுச் சமையலறை வரையில் போகிறோம்”
இது 1927க்குப் பிறகு நடந்த ஒரு நிகழ்ச்சியாகும். இது தந்தை பெரியார் அவர்கள் 1925ம் ஆண்டு துவங்கிய சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம்தானே! எனவே, தாழ்த்தப்பட்ட சகோதரர்களை வைக்கம் தெருக்களிலே நடமாட உரிமை பெற்றவர்களாக மாற்றியது மட்டுமல்ல பெரியாரின் தொண்டு! மகாத்மா காந்தியையும், சீனிவாச அய்யங்கார் வீட்டுக்குள் அழைத்துச் சென்ற மாபெரும் தொண்டு பெரியாரின் தொண்டு, தத்துவம்!அடுத்து நாம் பார்க்கப் போவது, இந்து சமூகத்தின் அனைத்து ஒடுக்குமுறை அம்சங்களுக்கும் எதிரான கலகத்தின் சின்னமாக விளங்கிய சிங்கத்தின் புத்தகம்
கருஞ்சட்டைத் தமிழர் நவம்பர்1-09
Tuesday, February 15, 2011
உச்சநீதிமன்ற நீதிபதி வாங்கிய லஞ்சம்: காங்கிரஸ் எம்.பி., பகிரங்கக் குற்றச்சாற்று மத்திய அரசின் சட்டத்துறை விசாரணைக் கமிஷன் அமைத்து ஊழல்களைக் களைய முன்வர வேண்டும்
உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் வாங்கிய லஞ்சம்பற்றி கேரள மாநில நாடாளுமன்ற காங் கிரஸ் உறுப்பினர் கே. சுதாகரன் வெளிப்படை யாகக் கூறிய குற்றச்சாற்றை எடுத்துக்காட்டி, நீதித்துறையில் நிலவும் இத்தகைய ஊழல்களைக் களைய விசாரணைக் கமிஷன் அமைக்க வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஊழலைப்பற்றி உலகறிய ஓங்காரக் கூச்சல் போடும் உச்சநீதிமன்ற நீதிபதியைப்பற்றி, கேரளத்தைச் சார்ந்த ஒரு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே. சுதாகரன் என்பவர் மிகவும் துணிச்சலாகப் பேசியுள்ளார். அவர் கூறிய சில செய்திகள் எவரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் என்பது உறுதி.
உச்சநீதிமன்ற நீதிபதிமீது லஞ்சக் குற்றச்சாற்று!
கேரளாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ண பிள்ளைக்கு ஒரு ஊழல் வழக்கில் ஓராண்டு தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அவருக்கு கேரளாவில் உள்ள கொட்டரகரா என்ற ஊரில் காங்கிரஸ் தலைமை யிலான கூட்டணி வரவேற்பு அளித்தது. அதில் பேசிய காங்கிரஸ் எம்.பி., கே. சுதாகரன், உச்சநீதிமன்றத்தின் நீதிஅரசர் ஒருவர் லஞ்சம் வாங்கினார் என்ற பரபரப்பான குற்றச்சாற்றை சுமத்தியுள்ளார்.
மதுக்கடை பார் உரிமங்களை ரத்து செய்தது கேரள உயர்நீதிமன்றம்; அதற்கு மேல் முறையீடு செய்ததில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் லஞ்சம் வாங்கினார் என்பதே அவரது குற்றச்சாற்று.
இதுபற்றி அவர் (கே.சுதாகரன்) மறுநாள் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு விடையளித்தபோது,
நான் சொன்ன வார்த்தையை திரும்பப் பெறப் போவ தில்லை; அது உண்மை; ஆனால் என்னிடம், அதற்கான ஆதாரம் இல்லை. உண்மையில் நடந்ததைத்தான் சொன்னேன். இது பல விஷயங்களை உள்ளடக்கியது; நீதிபதிகளும், தீர்ப்புகளும் எக்காலத்திலும் சுதந்திரமாக இருந்ததில்லை; சில சந்தர்ப்பங்களில் நிர்ப்பந்தங்கள் வந்திருக்கலாம். இந்தக் குற்றச்சாற்றை நிரூபிக்க முடியாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்பதும் எனக்குத் தெரியும். அதே சமயத்தில் நீதி விசாரணைக் கமிஷன் அமைத்தால் அதன்முன் சாட்சியம் அளிக்க நான் தயாராக இருக்கிறேன். எந்த இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பதுபோன்ற விவரங்களை வெளியிடுவேன் என்றார் சுதாகரன்.
லஞ்சம் கொடுத்ததை நேரில் பார்த்தார்
உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கினை நான் சந்திக்கிறபோதுதான் ஒரு நீதிபதியைப் பற்றி எனது வழக்கறிஞர் நண்பர் கூறினார். நான் நம்பவில்லை. கடைசியில் ஒரு நிகழ்வை நானே நேரில் பார்த்தேன். கண்ணால் கண்டபின்தான் நம்பினேன். லஞ்சம் வாங்கிய அதே நீதிபதி பின்னர் ரூ.1.5 லட்சம் வேண்டும் என்று ஒரு ஆள்மூலம் கேட்டார் என்றும் சுதாகரன் கூறியுள்ளார்.
ரூ.21 லட்சம் லஞ்சம்
கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ரத்து செய்ய ஒரு நீதிபதி ரூ.21 லட்சம் லஞ்சம் வாங்கினார் என்று சுதாகரன் எம்.பி. கூறிய இந்தத் தகவல்கள் பற்றி வழக்குரைஞர்கள் - நீதிமன்ற அவமதிப்பு போட்டால் சரியாகிவிடாது. மத்திய சட்டத் துறை ஒரு விசாரணைக் கமிஷனை அமைப்பது நல்லது; பொதுவான வகையில் நீதித்துறை பற்றியும் அண்மைக் காலத்தில் அதுபற்றிய பல புகார்கள் ஓய்வு பெற்ற பல தலைமை நீதிபதிகள் குறிப்பாக சபர்வால் என்பவர் ஓய்வு பெறுவதற்கு முன் தந்த சில தீர்ப்புகள் பற்றியும், திரு. பாலகிருஷ்ணன் அவர்கள்பற்றிய பல குற்றச்சாற்றுகளும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரால் கூறப்பட்டுள்ளதும் நீதித்துறையின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெகுவாக கீழிறக்கத்திற்குக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீதித்துறை ஊழல்களையும் கண்டறிய வேண்டும்
எனவே இதுபற்றி மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டு மானால் - ஊழல், நிருவாகத் துறையிலும், சட்டத் துறையிலும் (Executive Legislature) உள்ளதுபோலவே நீதித்துறையாக இருந்தாலும் (Judiciary) அதனையும் கண்டறிந்து களைய வேண்டும்.
பல நேரங்களில் நீதிபதிகள் தங்கள் எல்லைகளைத் தாண்டிப் பேசுவதும் கமெண்ட் அடிப்பதும், பிறகு மாற்றிச் சொல்வதும் நீதித்துறையின் ஓர்ந்து கண்ணோட் டமின்றி தேர்ந்து நீதி செலுத்துவதைப் பாதிப்பதாகும்.
நீதிபதிகள் பிராசிகியூட்டர்களாக மாறக் கூடாது
நீதிபதிகள் நீதிபதிகளாக அமர்ந்து தீர்ப்பளிக்க வேண்டுமே தவிர, அவர்கள் பிராசிகியூட்டர்களா கவோ அல்லது விசாரணை நடத்தும் போலீஸ்காரர் களாகவோ, குற்றம் சுமத்துபவர்களாகவோ ஆகா மல், சாற்றப்பட்ட குற்றத்தின் தன்மையை நடுநிலை யோடு, சொந்த விருப்பு வெறுப்பு, குரோதம், உள் நோக்கம் ஆகியவைகளுக்கு ஆளாகாமல் தீர்ப்பு களை வழங்குவதன் மூலம்தான் உயரிய கடமையை அவர்கள் ஆற்றியவர்கள் என்ற நன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
மத்திய அரசு அலட்சியப்படுத்தக் கூடாது
ஆட்சியின் முப்பெரும் பிரிவுகளும் ஒன்றை ஒன்று புரிந்து, செயல்பட வேண்டியதே - எல்லை மீறாமல் பணிபுரிவதே - சீரிய ஜனநாயகம் தழைக்க ஒரே வழியாகும். நீதி தேவதை சிலைக்குக் கண்ணைக் கட்டினால் மாத்திம் போதாது; நீதியரசர்களின் கண்களும் கட்டப் பட்டு, கருத்துக் கண்கள் மட்டுமே திறந்த மனதுடன் தாள்களில் எழுதும் தீர்ப்புகளில் காட்ட வேண்டிய மகத்தான பொறுப்பு உண்டு.
மத்திய அரசு எம்.பி.,யின் குற்றச்சாற்றை அலட்சியப் படுத்தாமல் நீதித்துறை மாண்பினைக் காத்திட வேண்டும். ஏனெனில் நீதித்துறைதான் ஜனநாயகத்தில் மக்களின் கடைசி நம்பிக்கையாகும்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
தலைவர்
திராவிடர் கழகம்
Subscribe to:
Comments (Atom)



