Wednesday, March 2, 2011

நீங்கள் மாமனிதர்

கருப்புச்சட்டை வெள்ளை இதயம்
நெஞ்சில் உரம் நேர்மை திறம்
மூச்சில் தமிழ் பேச்சில் நெருப்பு
உயர்ந்த சிந்தனை தெளிவான பார்வை
இவற்றுக்குச் சொந்தக்காரர்
ஈரோட்டுத் திண்ணைக்காரர்
சமூகநீதிக் காவலர்-அவரே
எங்கள் அன்பு ஆசிரியர் அய்யா
கடலூரின் கருத்துக்கனல் -என்றும்
அடங்கா எழுத்துப் புனல்-
எழுதிய நூல்கள் 75
அத்தனையும் அரு மருந்து
60 ஆண்டுகள் அயராத சமூகப் பணி
சமுதாயப் பிணியை நீக்கும் பணி
அதிகாரம் பேசும் பூமியில்
அரிதாரம் பூசாத மனிதர்
விடுதலை மூலம் மூடப்பழக்கங்களுக்கு
மூட்டை கட்டும் ஆசிரியர்
உண்மை உரைத்து புதிய
உலகம் செய்யும் போராளி
அகில உலகில் முதன்முதலாய்
பாவையருக்கு தொழில்நுட்பக் கல்லூரி
கண்ட கல்விக் காவலர்
பெண்களைப் போற்றும் கண்மணி
பெண்களே போற்றும் வீரமணி
மூடநம்பிக்கை ஒழிப்பதே மூச்சு
மனிதாபிமானம் வளர்ப்பதே பேச்சு
பெண் உரிமை பெண்களுக்கு சொத்துரிமை கண்ட
பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு
காணத் தூண்டிய
பெரியாரின் இளவல்
பெண் உரிமைக் காவலர்
தடம் பார்த்து நடப்பவன் மனிதன்
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்

(கோவை கே.ஜி.அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது அளிக்கப்பட்டு சிறப்பு செய்தபோது டாக்டர் கே.ஜி.பக்தவச்சலம் அவர்களால் வாசித்து அளிக்கப்பட்ட புகழாரக் கவிதை இது. 25.2.2011)
http://viduthalai.in/new/home/archive/4300.html

0 comments:

Post a Comment