Thursday, March 3, 2011

டில்லி பெரியார் மய்யத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சமூகநீதியறிஞர்கள் பங்கேற்றுக் கருத்துரை ஆற்றினர்.  டில்லி பெரியார் மய்யத்தில் சமூக நீதிக்கான கருத்தரங்கு, திராவிடர் கழகம், சமூக நீதிக்கான வழக்கறிஞர் அமைப்பு, டில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாண வர்கள் அமைப்பு, அனைத்திந்திய பிற் படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கங் களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார் பில் இன்று நடைபெற்றது.

பங்கேற்றோர்

இன்று காலை டில்லி பெரியார் மய்யத்தில் காலை 10.30 மணியளவில்  சமூக நீதியும் பெரியார் இயக்கத்தின் பங்களிப்பும் என்ற தலைப்பில் தொடங் கிய சமூக நீதிக்கான கருத்தரங்கிற்கு வந்தவர்களை அனைத்திந்திய பிற்படுத் தப்பட்ட அரசுப் பணியாளர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி வரவேற்றுப் பேசினார்.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் லட்சுமணன் எஸ்.தமிழ் (அமெரிக்கா), முன்னாள் மத்திய கல்வித் துறை அமைச்சர் டி.பி.யாதவ், உச்சநீதிமன் றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் பேரா.ரவி வர்மகுமார், ஏ.சுப்பாராவ், டில்லி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் பார்த்த சாரதி மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., திருச்சி சிவா எம்.பி., ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கருத்தரங்கின் தொடக்க உரையை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் எம்.என்.ராவ் மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் எஸ்.கே.கார் வேந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.

சமூகநீதிக்கான கருத்தரங்கின் தலைமை உரையை, திராவிடர் கழகத் தின் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான  கி.வீரமணி அவர்கள் நிகழ்த்தினார். அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மாண வர் அமைப்பு மற்றும் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஞ்சையா அவர்கள் நன்றி கூறினார்.

இக்கருத்தரங்கிற்கு டில்லி பல்கலைக் கழகம் மற்றும் ஜவலர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களும், பல்வேறு மாநிலங்களி லிருந்து சமூகநீதி ஆர்வலர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட பல்கலைக் கழக வளா கங்களில் இக்கருத்தரங்கம் பற்றிய பல வண்ண சுவரொட்டிகள் மாணவர் களைப் பெரிதும் கவர்ந்தன.

இந்த இரு பல்கலைக் கழகங்களிலும்  உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு (27 சதவிகிதம்), தவ றான விளக்கம் கூறி அவர்களுக்குரிய எண்ணிக்கையைக் குறைக்கும் சூழ்ச் சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மனித வளத்துறை இதில் தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
http://viduthalai.in/new/page1/4651.html

0 comments:

Post a Comment