Wednesday, August 10, 2011

உ.பி. காசியில் சமூகநீதியாளர்களின் சங்கமம்!

இடஒதுக்கீடு வெறும் பிச்சையல்ல - நமது உரிமை!
நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்!


வடக்கேயும் தந்தை பெரியார் தொண்டெனும் வான்மழை!
புதுக் கணக்கு, புது வெள்ளம் மடை திறந்த காட்சி!


தமிழர் தலைவரின் நேரடி வருணனை


வாரணாசியில் நடைபெற்ற பிற்படுத்தப் பட்டோர் அமைப்புகள் சங்கமித்த சமூகநீதி விழாவின் நேர்த் தியையும், மாட்சியையும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் நேரிடை வருணனையாகத் தரும் தகவல்கள் இதோ!

உத்தரப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான வாரணாசி மாநகரத்தில் ஒரு (முன்னாள் காசி என்ற பெயர் பெற்ற நகரம்) மாபெரும் சமூக நீதித் திருவிழா 7.8.2011 ஞாயிறு மாலை 6 மணியளவில், பிரபல நட்சத்திர ஓட்டலான கிளார்க்ஸ் மாநாட்டு அரங்கத்தில் உ.பி. மாநில பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலக்  கூட்டமைப்பின் (Federation of other Backward Classes (OBC) Employees Welfare Association) சார்பில் மிகச் சிறப்பாக மாலை 6 மணிக்குத் துவங்கி இரவு 10.30 மணி வரை நடை பெற்றது; அதற்குப் பிறகு வந்து பங்கேற்ற குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்த சுமார் 1000 (ஆயிரம்) பேர் களுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரவு விருந்தும் அளிக்கப்பட்டு (இரவு 11.30 மணிக்கு) விழா நேர்த்தியாக நிறைவுற்றது.

பிற்படுத்தப்பட்ட அமைப்புகளின் சங்கமம்!

மத்திய அரசு, மாநில அரசு, பொதுத் துறை அமைப் புகள், வருமானவரி, யூனியன் வங்கி, வணிக அமைப்பான சேம்பர் ஆஃப் காமர்ஸ் இப்படி பல அமைப்புகளும் இணைந்து இந்த சமூக நீதி - மாநாடு - அய்.ஏ.எஸ்.; அய்.ஆர்.எஸ்.; அய்.பி.எஸ். தேர்வுகளில் உ.பி. பீகார் மாநிலங்களில் இவ்வாண்டு தேர்வு பெற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய  வெற்றியாளர்களுக்குப் பாராட்டும் இதில் இணைந்து நடத்தப்பட்டது.

ஏற்பாடுகளை மிகவும் முறையாகவும் பாராட்டத் தக்கனவாகவும் ஏற்பாட்டாளர்களான, அமைப்பாளர்கள் குறிப்பாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அமைப்பின்  தலைவர். ரவிந்திரராம். கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமிர்த்தான்ஷு, அதன் தலைவரான மத்திய அரசின்  பல்கலைக் கழகமான காசி வித்தியாபீடத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் எஸ்.எஸ். குஷ்வாகா அவர்களும், அசோக் குமார் கூட்டமைப்பின் உ.பி. செயலாளர், அசோக் ஆனந்த் (Voice of the OBC இந்தி பதிப்பு ஆசிரியர் கல்வியாளர்) ஆகியோரும் அவருடன் ஒத்துழைத்த பல நண்பர்களும் ஆர்வம் கரை புரண்டோட சமூகநீதித் திருவிழாவை நடத்தி வரலாறு படைத்தனர்.

பங்கேற்ற பிரமுகர்கள்

வாரணாசியின் மாவட்ட மாஜிஸ்திரேட்டும் கலெக்ட ருமான திரு ரவீந்திரா அய்.ஏ.எஸ். பேராசிரியர் எஸ்.எஸ். குஷ்வாகா, யூனியன் வங்கி பொதுமேலாளர் திரு பி.கே. பன்சால், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் நல். இராமச்சந்திரன், காசி பல்கலைக் கழக மேனாள் இந்திப் பேராசிரியரும் துறைத் தலைவருமான பேராசிரியர் சவுத்திராம்யாதவ், பிற்படுத்தப்பட்டோர் நிதி உதவிக் கார்ப்பரேஷன் முன்னாள் தலைவரான டாக்டர் பாபுராம் நிஷாத்,  ஆகியோர் சிறப்பு பேச்சாளராக, விழாத் தலைவராக, துவக்குபவர்களாக, பரிசளிப்பவர்களாகக் கலந்து கொண்டனர். தலைமை விருந்தினராக என்னை அழைத்து உரையாற்றிடச் செய்தனர்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நல அமைப்பின் பொதுச் செயலாளரான ஆற்றல்மிகு நண்பர் கோ. கருணாநிதி அவர்களை முக்கிய சிறப்புப் பேச்சாளராக அழைத்து பெருமைப்படுத்தினார்கள்.

வான் மழையாய் வந்த பெரியார் தொண்டு!

பேசியவர்கள் மாவட்டக் கலெக்டரிலிருந்து ஒவ்வொருவரும் மிகவும் சிறப்பாக உணர்ச்சிப் பிழம்பாக பேசினர். சுமார் 10,12 பேர்கள் அய்.எஸ்.அய்.பி.எஸ். தேர்வு பெற்ற மணிமணியான இளைஞர்கள், பிரகாசிக்கும் முகங்களோடு உற்சாகம் பொங்க அமர்ந்திருந்து பாராட்டும் பரிசும் - பெரியார் நூல்களும் - பெற்றனர்!

அவர்களது பெற்றோர்கள், வாழ்விணையர்கள் உடன் வந்து அவர்களும் பாராட்டுப் பெற்றபோது கண்ணீர் விட்டு உவகை பொங்க மகிழ்ந்த காட்சி, தந்தை பெரியார் தம் தொண்டு எப்படியெல்லாம் வடக்கேயும் இன்று வாடிய பயிர்களுக்கு வான்மழையாய் வந்தடைந்தது என்று பூரித்தோம் நாம்!

வெற்றி பெற்ற நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள் என்பது உறுதி; ஆனால் உங்களுக்குள்ள முக்கிய கடமை உங்கள் பெற்றோர் அளவில் துவங்கி உங்களை வளரச் செய்த நண்பர்கள் ஆசிரியர்கள், (கண்ணுக்குத் தெரிந்தவர்கள் - தெரியாதவர்கள் உட்பட) அனை வருக்கும் நன்றி காட்டி நடந்துகொள்ளுங்கள்; சமூகத்தினால் தான்  சமூகத்திற்கு நீங்கள் பட்ட கடனை எப்படித் திருப்பித் தர முடியும் என்பதை நன்கு சிந்தித்து அதற்கேற்ற தொண்டறத்தை அடுத்தடுத்து வரும் தலைமுறைகளை உருவாக்க ஒத்துழைப்பதே மிக மிக முக்கியமாகும் என்று நானும் தோழர்களும் குறிப்பிட்டபோது அரங்கம் கை தட்டலால் அதிர்ந்தது!

சமூகநீதி என்பது வெறும் பிச்சையல்ல!


சமூகநீதி, இடஒதுக்கீடு என்பது பிச்சையல்ல; நம் உரிமை. யாரிடமும் நாம் கையேந்தவில்லை. தட்டிக் கேட்டுப் பெறுவதற்கு நமக்கு உரிமையும் நியாயமும் உண்டு; அரசியல் சட்டப்படி தான் நாம் அதைக் கேட்கிறோம்.

முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் தந்தை பெரியார் போராட்டத்தால்தான் வந்தது. அதன் வரலாறு தான் இன்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட தந்தை பெரியாரின் வகுப்புரிமை போராட்டம் ஏன்? என்ற நூல் என்பதை விளக்கி, மண்டல் கமிஷன் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதற்கும் அமல்படுத்துவதற்கும் திராவிடர் கழகம், 42 மாநாடுகளை 16 போராட்டங்களை உ.பி. உட்பட பல மாநிலங்கள், சந்திரஜித் யாதவ் போன்றவர்கள் துணையோடு கர்ப்பூரிதாக்கர், போன்றவர்களோடு நடத்தியுள்ள வரலாற்றை புதிய தலைமுறைக்கு எடுத்துக் கூறினேன்.

90 ஆண்டுகளுக்குமுன் காசியில் பெரியார்!

தோழர்கள் காட்டிய ஆர்வம், விமான தளத்தில் வழியனுப்பி வைக்கும்போதுகூட இங்கே நாங்கள் அடிக்கடி வர வேண்டும். சுயமரியாதை இயக்கத்தினைத் துவக்க வேண்டும் என்று ஆர்வம் கொப்பளிக்கக் கூறியது கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தோம் நாங்கள்.

சுமார் 90 ஆண்டுகளுக்குமுன் எனது தலைவர் ஆசான் தந்தை பெரியார் சந்நியாசியாகிட காசி வந்து வெறுத்துத் திரும்பி பிறகு சுயமரியாதை இயக்கம் துவக்கி, சமூகப் புரட்சிக்கு வித்திட்டார்; இன்று அவரது தொண்டன் நான் இங்கே உங்களால் தலைமை விருந்தினராக அழைத்துச் சிறப்பிக்கப்படுகிறேன் என்றால் பெரியார் வாழ்கிறார். பெரியாரால் நாம் வாழுகிறோம் என்றும் வாழ்வோம் என்று ஒப்பிட்டுக் காட்டினேன்.

30 நிமிட ஆங்கில உரை

ஜோதிபா பூலே, சாகுமகராஜ், நாராயண குரு போன்ற சமுதாய போராளிகளில் தந்தை பெரியார் மிகவும் மதித்த  அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர் கூறிய கருத்துகள், ஜாதிபேத அடக்குமுறைகள், அதைத் தாண்ட சமூகநீதிக் களத்தில் கல்வி, உத்தியோகம், பகுத்தறிவு, பெண்கள் சமூக அதிகாரம் பெறும் நிலை எல்லாம் நமது அஜண்டாக்களாக இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலத்தில் 30 நிமிடங்கள் பேசியதற்கு நல்ல வரவேற்பு, ஆமோதிப்பு இருந்ததோடு, அதன்பின் பேசிய உ.பி. பிரமுகர்கள் பெரியார் வந்தபோது நாங்கள் இளைஞர்கள் இப்போது முதியவர்கள். நீங்கள் இப்பகுதிக்கு எல்லாம் வந்து விழிப்புணர்வை உருவாக்க தலைமை தாங்கி, வழிகாட்டுங்கள் என்றெல்லாம் நாம் வியக்கத்தக்க முறையில் இந்தியில், ஆங்கிலத்தில் பேசினர்!

இளைஞர்களான அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். வெற்றியாளர்களும் உணர்ச்சியுடன் பதில் அளித்தனர்.

இரவு 10.30 மணி வரை விழா
இரவு 10.30மணிக்கும் அவர்கள் கலையவும் இல்லை; களைப்படையவும் இல்லை! என்னே அதிசயம்! தமிழ்நாட்டில்கூட அப்படி ஒரு கூட்டம் அவ்வளவு நீண்ட நேரம் நடைபெறுமா என்பது அய்யமே!

1958-இல் அய்யா தந்தைபெரியார், அன்னை மணியம் மையாருடன் காசிக்குப் பார்வையாளராக சென்றபிறகு, அய்யாவின் கொள்கையைப் பரப்பும் வாய்ப்பு இப்போது! தோழர் கோ. கருணாநிதியின் அயராத உழைப்பும், திட்டமிட்ட செயலாக்கமும் வடமாநிலங்களிலும் (உ.பி. பீகார்) நாடாளுமன்றத்திலும் நல்ல பயனைத் தந்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, 27 சதவிகித இடஒதுக் கீட்டினை (OBC) பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அறிவித்து ஆணை பிறப்பித்த வரலாற்றுச் சிறப்புக்குரிய நாள் ஆகஸ்டு 7 (1990). 1958-இல் வாரணாசி, பாட்னா, டில்லி போன்ற பலவிடங்களிலும் அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பும் ஏனைய சமூகநீதி அமைப்புகளும் இணைந்து தந்தை பெரியாரை அழைத்து இதுபோன்ற சமூகநீதித் திருவிழாவைக் கொண்டாடின.

நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்!

வாரணாசி விழாவில் எனது உரையின் இறுதியில் குறிப்பிட்டேன். நாம் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம்; அடைய வேண்டிய இலக்குகள் ஏராளம். சில சிறு சண்டைகளில்  வெற்றி பெற்றுள்ளோம். யுத்தத்தில்  வெற்றி பெற்றால் தான் அது உண்மை யான நிலைத்த நீடித்த வெற்றியாகும் என்று குறிப் பிட்டேன். உ.பி. மாநிலம் 7ஆம் தேதி திருவிழா வழிகாட்டு கிறது; புதுகணக்கைத் திறந்து, புதுவெள்ளத்திற்கான மடை திறந்து விடப்பட்டுள்ளது. பெரியார் இப்போது வடபுலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்!
- கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


வாரணாசி மாவட்ட ஆட்சியர் ரவீந்திரா (அய்.ஏ.எஸ்.) உரை

அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற நீங்கள் திறமை படைத்தவர்கள்; நாளை பணியை சிறப்பாக செய்திட உள்ளீர்கள். ஆனால் நீங்கள் நூறு விழுக்காடு உங்கள் உழைப்பை தந்தாலும், உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பது சந்தேகமே! ஆகவே, நீங்கள் இருநூறு விழுக்காடு அதிகம் உழைத்திட வேண்டும்; நேர்மையாகவும், துணிவாகவும் உங்கள் பணியை செய்திடுங்கள்; அதில் நீங்கள் பின்வாங்க வேண்டாம்.

நீங்கள் சிறப்பாக பணியாற்றினால் கிடைக்கும் பாராட்டைவிட, சிறு தவறு செய்தாலும், உங்களைக் கடுமையாக தண்டித்திட தயாராகும் சமுதாயத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள் என்பதையும், அது உங்களை மட்டும் அல்லாமல், உங்கள் சமுதாயத்தையும் பாதிக்கும் என்பதையும் நினைவில் கொண்டு, சிறப்பாகப் பணியாற்றுங்கள்.

நீங்கள் இடஒதுக்கீட்டின் பயனால் இப்பணி கிடைத்தது என்பதை மறந்து விடாதீர்கள். இதை எதிர்க்கும் சிலர் கடந்த 21 ஆண்டுகளாக தாங்கள் பழிவாங்கப்பட்டதாக கருதுகிறார்கள். ஆனால் நாம் அவர்களால், கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக பழி வாங்கப்பட்டோம் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை. ஆனால் நாம் மறந்து விடாமல், இடஒதுக்கீடு கிடைத்திட அரும்பணி ஆற்றிய மாமனிதர்களை நன்றியோடு நினைவில் கொள்ளுங்கள்.

Tuesday, August 9, 2011

சமூக நீதித் தடத்தில் தமிழர் தலைவரின் தேவை!

உத்தரப்பிரதேசம் வாரணாசி (காசி)யில் உத்தரப்பிரதேச மாநில பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கக் கூட்டமைப் பின் சார்பில் குடிமைப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற (அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வில்) தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாராட்டு விழா 7.8.2011 அன்று மாலை நடைபெற்றுள்ளது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டார்.

சமூக நீதிக்கான சட்டங்கள், ஆணைகள் இருந்தும்கூட அவற்றை செயல்படுத்துவதில் ஆங்காங்கே உயர்ஜாதி நிருவாக வர்க்கம் முட்டுக்கட்டைகளைப் போட்டுக் கொண்டுதான் வருகின்றன. நீதிமன்றங்கள்கூட தவறான வியாக்கியானங்கள்மூலம் அந்தச் சக்திகளுக்குத் துணை போவதும் வேதனைக்குரியது.

மண்டல் குழுப் பரிந்துரைகளின்படி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு அளிக்கப்பட்டது (7.8.1990)

வழக்கம்போல உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை காரணமாக அது நடைமுறைக்கு வர மேலும் இரண்டாண்டு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரண்டாண்டு கழித்து அளிக்கப்பட்ட தீர்ப்பில்கூட புதிதாக - அரசமைப்புச் சட்டத்தில் எந்தப் பகுதியிலும் காணப்படாத பொருளாதார அளவுகோல் என்ற புதிய கரடியை அவிழ்த்து விட்டனர்.

மத்திய அரசில் 27 விழுக்காடு அளிக்கப்பட்டும் மேற்கு வங்கம் போன்ற பொதுவுடைமைக் கட்சியினர் ஆளும் மாநிலத்தில்கூட 27 விழுக்காடு கொடுக்கப்படாத நிலை கண்டிக்கத்தக்கது.

27 விழுக்காடு இடஒதுக்கீடு அமல்பட எத்தனிக்கும் கால கட்டத்தில் அப்பொழுது இருந்த பா.ஜ.க. அரசு மத்திய அரசு பணியாளர்களுக்கு ஓய்வு வயது 58 இலிருந்து 60 என்று உயர்த்தி, ஏற்கெனவே பணியில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த உயர்ஜாதியினர் மேலும் ஈராண்டுகள் பணியில் தொடரவும், பிற்படுத்தப்பட்டவர்கள் உடனடியாக உள்ளே நுழைய முடியாத நிலை என்ற சூழ்ச்சியையும் அரங்கேற்றினர்.

இப்பொழுதுகூட மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப் பட்டோர் 27 விழுக்காடு இடங்களைப் பெற்றிடவில்லை; மிகவும் கேவலமான முறையில் வெறும் 6 சதவிகிதத்துக்கே தள்ளாடிக் கொண்டு இருக்கின்றனர்.

மத்திய தேர்வாணையமோ பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டோரின் இடஒதுக்கீட்டில் புகுந்து விளையாடிக் கொண்டு இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெற்ற இவர்களை பொதுப் போட்டிக்கான இடங்களில் அமர்த்தாமல், அவர்களில் இடஒதுக்கீடு பிரிவுக்குக் கொண்டு போய் 50 சதவிகித இடங்களையும் உயர்ஜாதி ஆதிக்க வர்க்கம் கபளீகரம் செய்து கொண்டு திரிகிறது.

பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது. கல்வியில் இடஒதக்கீடு கிடைப்பதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 9 விழுக்காடு என்ற அளவில் அளிக்கப்படும் என்றனர். இப்பொழுதோ அதனை ஆறு ஆண்டுகாலமாக நீடிப்பதற்கான சூழ்ச்சியிலும் இறங்கிவிட்டனர்.

மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள (மண்டல் குழு அறிக்கையில் கூறியபடி) பிற்படுத்தப்பட்டோர் சமூகநீதியைப் பெற்றிடப் போராடும் நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 150-க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருந்தாலும் ஒன்றுபட்டு போராடும் நிலை எட்டப்படவில்லை. அவரவர்களும் அவர்களின் கட்சிக் கூண்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய அளவில் பிற்படுத்தப் பட்டோருக்கான ஓர் இயக்கம் கட்டப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதைத்தான் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளனர்.

தந்தை பெரியார் வழிவந்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று ஓர் அகில இந்திய இயக்கத்தை வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

1995 செப்டம்பர் 19இல் டில்லி மாவ்லங்கர் மன்றத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்களும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் மண்டல் குழுப் பரிந்துரைகளில் காணப்படும் அடுத்த கட்ட செயல்பாட்டுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

1959 பிப்ரவரி முதல் தேதி முதல் 28 வரை வடநாட்டுக்கு பயணத்தைத் தந்தை பெரியார் (4000 மைல் பயணத்தை சாலை வழியாக) மேற்கொண்டார். ஜான்சி, கான்பூர், லக்னோ, டெல்லி, பம்பாய் ஆகியவை அவர் மேற்கொண்ட பயணத்தின் முக்கிய பகுதிகளாகும். அந்தப் பயணத்தில் அன்னை மணியம்மையார் அவர்களுடன் நமது ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் அய்யாவுக்கு உதவியாகச் சென்றிருந்தார்.

கான்பூரில் ரிபப்ளிக் கட்சியினர் உருவிய வாளுடன் தந்தை பெரியார் அவர்களுக்கு உணர்வு மிக்க வரவேற்பினைக் கொடுத்தனர். பெரியார் ராமசாமி ஜிந்தாபாத்!, பம்மன் பாரத் ஜோடுதோ! (பார்ப்பானே நாட்டை விட்டு வெளியேறு!) என்று முழக்கமிட்டனர்.

அந்த நிகழ்ச்சியிலும் தந்தை பெரியார் அவர்கள் அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தலைமை தாங்கி வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். 52 ஆண்டுகளுக்குப்பின் அதே கோரிக்கையை வாரணாசி யில் தமிழர் தலைவரிடம் வேண்டுகோள் வைத்தது சரித்திரத்தின் வினோதமான சுழற்சியாகும்.

தந்தை பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, சமூகநீதிக் களத்தில் இந்தியாவுக்கும், மத மற்ற சமத்துவத்திற்கு உலக அளவிலும் தேவைப்படும் தலைவர் ஆகி விட்டார். மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற புரட்சிக் கவிஞரின் வரிகளுக்கான அர்த்தம் இதுதான்!

சமச்சீர் கல்வி: உச்சநீதிமன்ற தீர்ப்பு மக்கள் நெஞ்சில் பாலை வார்த்தது!

ஆட்சி மக்கள் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டுமே தவிர
தன்முனைப்புக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடாது!
முதல் அமைச்சரின் போக்கில் மாற்றம் வரட்டும்! 


உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வி தொடர்பாக வழங்கிய தீர்ப்பினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தி.மு.க. அரசு ஆட்சியிலிருந்தபோது கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட சமச்சீர் கல்வி பாடத் திட்டம் என்பது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்து, தக்காரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மிக அருமையான பாடத் திட்டம் - ஒன்று முதல் 10 ஆவது வகுப்பு வரை.
இதனை எதிர்க்கட்சிகளாக அன்று அமர்ந்தவர்கள் உள்பட பலரும் (அ.தி.மு.க. தவிர) வலியுறுத்தினார்கள். செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்குக் கோரிக்கையாகவும் வைத்தனர்.
அதனால் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அதற்கென தனிச் சட்டம் கொண்டு வந்து, (அமைச்சரவையில் வல்லுநர்களால் வரையப்பட்ட அந்த பாட திட்ட அறிக்கையையும் விவாதித்து) ஒரு மனதாக ஏற்று தமிழக சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றினார்.
தேர்தல் முடிவும் - மாற்றமும்!
அப்போது அதனை எதிர்த்து சில தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குப் போட்டனர். அது தள்ளுபடியான பிறகு, உச்சநீதிமன்றத்திலும் அப்பீல் - மேல் முறையீடு செய்து அதிலும் தோல்வி கண்டனர். சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அன்றைய (தி.மு.க.) அரசு வரும் 2011-12 கல்வி ஆண்டிலிருந்து இப்பாடத் திட்டம் செயலுக்கு வரும் என்று கூறியதோடு அதற்கான பாடப் புத்தகங்களையும் சிறந்த பாட நூல் வல்லுநர்கள், கல்வி அறிஞர்களைக் கொண்டு சுமார் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிட்டு, இவ்வாண்டு பள்ளிக் கல்வியாண்டு துவங்குமுன்பே மாணவர்களுக்கு வழங்கிட எல்லா ஏற்பாடுகளையும் செய்த நிலையில்தான் தேர்தல் முடிவால் அ.தி.மு.க. அரசு செல்வி ஜெயலலிதா தலைமையில் அமையும்படி நேர்ந்தது.
மக்கள் தீர்ப்பு அனைவராலும் மதிக்கப்பட வேண்டியது என்ற நிலையில், அரசு என்பது ஒரு தொடர்ச்சி, சில மாற்றங்கள், கட்சி அரசியலால் ஏற்படுத்தலாமே தவிர, முந்தைய ஆட்சி செய்த எல்லாவற்றையும் தலை கீழாகக் கவிழ்ப்பது - செயல்படுத்தாமல் தன் முனைப்பு, வன்மத்தைக் காட்டுவது ஜனநாயகத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை! விரும்பத்தக்கதல்ல. ஆனால் புதிய அரசோ இதற்கு மாறாக செயல்படத் துவங்கி விட்டது!
அவசர அவசரமாக ரத்து செய்த நிலை!
இக்கல்வி ஆண்டு, பள்ளிகள் திறப்பதை ஒருமாதம் தள்ளி வைத்ததோடு, அப்போதும் இப்பாடத் திட்டத்தை ஏற்க இயலாது என்று பதவியேற்ற அன்றே அவசரக்கோலம் அள்ளித் தெளித்த நிலை என்றபடி, ஒரே நாளில் அமைச்சரவை முடிவு; சமச்சீர் கல்வியை ரத்துசெய்து சட்டத் திருத்தம்; அதற்கு அதே நாளில் ஆளுநர் ஒப்புதல் பெற்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1 கோடியே 20 லட்சம் பிள்ளைகள் - உலக அதிசயங்களில் ஒன்றாக  கடந்த 100 நாள்கள் பாடப் புத்தகங்களே இன்றி - யோகா, டான்ஸ் கதை காட்சி என்று காலந்தள்ளிய கொடுமை அன்றாட அவலமாகியது! பெற்றோர்களும், கல்வியாளர்களும், பொது நல விரும்பிகளும் மிகவும் வேதனையும் விரசமும் அடைந்தனர். ஒன்று முதல் பத்து வகுப்புவரை படிக்க வேண்டிய மாணவர்களின் படிப்புக் காலம் விரயப்படுத்தப்பட்டது. குறிப்பாக அரசு தேர்வைச் சந்திக்க வேண்டிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பீதியும், மன
நலப்பாதிப்பும் ஏற்படுத்தப்பட்ட கொடுமை!
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு - சமச் சீர் கல்வியை அமல்படுத்திட வேண்டும் என்பதே!
அரசு நியமித்த அக்கிரகார கமிட்டி
உடனே உச்சநீதிமன்ற படையெடுப்பு; அங்கே  தேவையானால் ஒரு புதுக் கமிட்டியை போட்டு சில பாடங்களை மறு ஆய்வு செய்யலாம் என்றனர். ஒரு அக்கிரகாரக் கமிட்டியை அவசரத்திற்குப் போட்டு, அவர்களிடம் அறிக்கை வாங்கி, மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. இத்தனைக் கோடி வரிப்பணம் பாழாவதா என்று  கேட்டதோடு, உடனே செயல்படுத்திட சமச்சீர் பாடப் புத்தகங்களை வழங்கிட ஆணையும் பிறப்பித்தார்கள்.
தொலைநோக்கோடு கூறினோமே!
அத்தீர்ப்பை ஏற்க நாம் உள்பட பலரும் தமிழக அரசை, முதல்வரை கேட்டுக் கொண்டோம். அவர் லட்சியம் செய்யவில்லை. நாம் விடுத்த அறிக்கையில் உச்சநீதிமன்றம் சென்றாலும்  - முடிவு எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது என்பது தான் முடிவாக இருக்கும் என்று தொலைநோக்கோடு கூறினோம்.
வழக்கம்போல அலட்சியம் செய்து, பிடிவாதமாக மேல் முறையீட்டுக்குச் சென்று இன்று உச்சநீதிமன்றம் இரட்டைத் தாழ்ப்பாளை அம்மையார் ஆசைக்குப் போட்டு விட்டது!
உச்சநீதிமன்றத் தீர்ப்பு 25 காரணங்களை முன்னிறுத்தி உச்சநீதிமன்றம் இன்று காலை இந்த நல்ல தீர்ப்பினை வழங்கி, பெற்றோர்களின் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது!
நியாயம், நீதி வென்றுள்ளது; தன் முனைப்பை முன்னிறுத்தி, அரசியல் நடத்தாமல் ஆக்க ரீதியாக இந்த ஆட்சி நடைபெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் - எதிர்பார்ப்பு என்பதை இதன் மூலமாகவாவது முதல் அமைச்சர் அம்மையார் புரிந்து கொண்டு, ஆட்சியை நடத்திட முன்வர வேண்டும்.
ஒரு குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து முன்பு மக்கள் திரண்டுள்ளது போலவே உணர்ச்சிப் பிரவாக வெள்ளம் ஓடுகிறது இன்று நாடெங்கும்.
சுவர் எழுத்தினைப் பார்த்துப் பாடம் பெற அ.தி.மு.க. அரசு தவறக் கூடாது.
மலைபோல் எதிர்ப்புகள்!
மூன்றே மாதங்களில் இவ்வளவு மலைபோல் எதிர்ப்பு மக்கள் வெறுப்பை ஒரு ஆட்சி சம்பாதிக்கலாமா? மேற்கொண்ட பல நடவடிக்கைகளிலாவது முன் யோசனையோடு பிடிவாதம்  காட்டாது, மக்கள் நலனுக்கு முன்னுரிமையே தவிர, தன் முனைப்புக்கே பழி வாங்குதற்கோ அல்ல என்று காட்ட வேண்டிய மகத்தான பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.
ஊடகங்களே உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள்!
ஊடகங்களே ஊமையன் கனவு கண்டதுபோல் மென்று விழுங்காமல் உள்ளதை உள்ளபடி எழுதி, ஊராள்வோருக்குத் தக்க அறிவுரை கூறி, உங்கள் மதிப்பை மரியாதையை உயர்த்திக் கொள்ளுங்கள் என்பதும்கூட நமது வேண்டுகோள்!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சமூகநீதியை நிலைநாட்ட தமிழர் தலைவரைத் தலைமையேற்க வேண்டுகோள்!

வாரணாசியில் நடை பெற்ற சமூகநீதி விழா வில், அகில இந்திய அள வில் சமூக நீதியை நிலை நாட்ட தலைமையேற்று வழி நடத்திட தமிழர் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உத்திரபிரதேச பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்க கூட்டமைப்பின் சார்பில் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று அய்.ஏ. எஸ்., அய்.பி.எஸ். பதவி களுக்கு இவ்வாண்டு தேர்வு பெற்றோருக்குப் பாராட்டு விழாவும் அதனுடன் இணைந்து தந்தை பெரியாரின் 1950 ஆம் ஆண்டு வகுப் புரிமை ஏன்? சொற் பொழிவின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீட்டு விழாவும் ஆகஸ்டு 7ஆம் தேதி மாலை வாரணாசி ஓட் டல் கிளார்க்ஸ் ஆவத் மாநாடு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு காசி வித் யபீத் பல்கலைக் கழ கத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எஸ்.எஸ்.குஸ்வாகா தலைமையேற்றார். யூனியன் வங்கி அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் அமைப்பின் தலை வர் ரவீந்திரராம் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். மாநில கூட்ட மைப்பின் செயலாளர் அமிர்தான்சு அமைப் பின் பணியினையும், வார ணாசியில் இரண்டாவது ஆண்டாக பாராட்டு விழா ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதையும் குறிப்புரையாக அளித்தார்.
துவக்கத்தில் தந்தை பெரியாரின் வகுப்பு ரிமை ஏன்? ஆங்கில நூலை பேராசிரியர் எஸ்.எஸ். குஷ்வாகா வெளியிட, யூனியன் வங்கி உத்திர பிரதேச மாநில பொது மேலாளர் பி.கே.பன்சால் பெற்றுக் கொண்டார்.
வெற்றி பெற்ற அய்.ஏ.எஸ். மாணவர்களுக்கு பாராட்டு
தொடர்ந்து, குடி மைப் பணித் தேர்வில் (அய்.ஏ.எஸ்.) வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை, பூங்கொத்து நினைவுபரிசு மற்றும் பெரியாரின் சிந்தனை கள் என்ற ஆங்கில நூல் ஆகிவற்றை ஒவ்வொரு வருக்கும் அளித்து, சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி சிறப்பு செய் தனர்.
தமிழர் தலைவர் பங்கேற்பு
விழாவில், தமிழர் தலைவர் கி.வீரமணி சிறப்புரை நிகழ்த்தினார். தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் உறுப்பினரும், நாடாளு மன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான எஸ். கே.கார்வேந்தன், வார ணாசி மாவட்ட ஆட்சி யர் ரவீந்திரா அய்.ஏ. எஸ்., பேராசிரியர் சவுத் திரம் யாதவ், தேசிய பிற் படுத்தப்பட்டோர் நிதி நிறுவன முன்னாள் தலை வர் டாக்டர் பாபுராம் நிஷாத், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச் சந்திரன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கரு ணாநிதி ஆகியோர் உரை நிகழ்த்தினர். மாநில கூட் டமைப்பின் செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.
அசோகா கல்வி நிறு வனத் தலைவர் அசோக் ஆனந்த் விழா நிகழ்ச்சி நிரலை கவிதைபட சிறப் பாக தொகுத்து வழங் கினார். சிறப்பு விருந் தினர்களுக்கு விழா குழுவினர் சார்பாக சால்வை, நினைவுப்பரிசு, பெரியாரின் சிந்தனை கள் நூல் அளித்து சிறப்பு செய்யப்பட்டது.
விழாவில், அமைப் பின் உறுப்பினர்கள் குடும் பத்தினருடன் கலந்து கொண்டது மிகவும் குறிப்பிடத்தக்கது.
பல்துறையைச் சேர்ந்த அறிஞர் பெரு மக்களும் கலந்து கொண்டு, அரங்கம் நிரம்பி இருந் தது. மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 10.30 மணிக்கு நிறைவுற்ற விழாவில், இறுதிவரை அனைவரும் இருந்து கருத்துகளை கேட்டறிந் தது மிகச் சிறப்பானதா கும். வியப்பளிப்பதாக வும் இருந்தது.
காசியில் முக்கிய மான காயில் விழா நடை பெறும் அதே நாளில் இந்துச் சமூக நீதிக்கான விழா சிறப்பாக நடை பெற்றது மிகவும் குறிப் பிடத்தக்கதாகும்.
அனைவருக்கும் இரவு உணவு விருந்தும் அளிக்கப்பட்டது. (சுமார் 11 மணி அளவில்) உத்தரபிரதேச மாநி லத்தில் வாரணாசியில் நடைபெற்ற சமூக நீதித் திருவிழாவாக அமைந் ததை அனைவரும் மகிழ் வுடன் பகிர்ந்து கொண் டனர்.
ஏறத்தாழ 50 ஆண்டு களுக்குப் பிறகு, வார ணாசிக்கு வருகை தந்த - தமிழர் தலைவரின் 30 நிமிடம் உரை சமூக நீதி, பெரியாரின் உழைப்பு, அரசமைப்பு சட்டத்தின் பிரிவு, சமூக ஏற்றத் தாழ்வு என அனைத்தையும் உள் ளடக்கியதை அனைத் துப் பெருமக்களும், சிறப்பு செய்யப்பட்ட மாணவர் களும் கவனத்துடனும், மகிழ்வுடனும் கேட்ட றிந்தது விழாவின் சிறப் பான அம்சமாகும்.
தலைமையேற்று நடத்த வேண்டுகோள்!
சமூக நீதி இயக்கத் துக்கு அகில இந்திய அளவில் தலைமையேற்று வழி நடத்தித் தருமாறு திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி அவர் களை விழா ஏற்பாட்டா ளர்கள் கேட்டுக் கொண் டனர். விழாவை முன்னிட்டு, தந்தை பெரியாரின் ஆங் கில நூல்களின் விற்ப னைக் கூடம் அமைக்கப் பட்டு அனைத்து நூல் களும் விற்கப்பட்டு விட்டன.
நிகழ்ச்சி முடிந்து தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்களை விமா னம் நிலையம் வரை வந்து ரவீந்திரராம், பேராசிரியர் எஸ்.எஸ். குஷ்வாகா, டாக்டர் ஹேமேந்திர குமார் அசோக் ஆனந்த், அமிர்தான்சு, பிரசாந்த், மற் றும் விழாக்குழுவினர் பலரும்  வழியனுப்பி வைத்தனர்.

சமூகநீதியை நிலைநாட்ட தமிழர் தலைவரைத் தலைமையேற்க வேண்டுகோள்!

வாரணாசியில் நடை பெற்ற சமூகநீதி விழா வில், அகில இந்திய அள வில் சமூக நீதியை நிலை நாட்ட தலைமையேற்று வழி நடத்திட தமிழர் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உத்திரபிரதேச பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்க கூட்டமைப்பின் சார்பில் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று அய்.ஏ. எஸ்., அய்.பி.எஸ். பதவி களுக்கு இவ்வாண்டு தேர்வு பெற்றோருக்குப் பாராட்டு விழாவும் அதனுடன் இணைந்து தந்தை பெரியாரின் 1950 ஆம் ஆண்டு வகுப் புரிமை ஏன்? சொற் பொழிவின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீட்டு விழாவும் ஆகஸ்டு 7ஆம் தேதி மாலை வாரணாசி ஓட் டல் கிளார்க்ஸ் ஆவத் மாநாடு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு காசி வித் யபீத் பல்கலைக் கழ கத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எஸ்.எஸ்.குஸ்வாகா தலைமையேற்றார். யூனியன் வங்கி அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் அமைப்பின் தலை வர் ரவீந்திரராம் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். மாநில கூட்ட மைப்பின் செயலாளர் அமிர்தான்சு அமைப் பின் பணியினையும், வார ணாசியில் இரண்டாவது ஆண்டாக பாராட்டு விழா ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதையும் குறிப்புரையாக அளித்தார்.
துவக்கத்தில் தந்தை பெரியாரின் வகுப்பு ரிமை ஏன்? ஆங்கில நூலை பேராசிரியர் எஸ்.எஸ். குஷ்வாகா வெளியிட, யூனியன் வங்கி உத்திர பிரதேச மாநில பொது மேலாளர் பி.கே.பன்சால் பெற்றுக் கொண்டார்.
வெற்றி பெற்ற அய்.ஏ.எஸ். மாணவர்களுக்கு பாராட்டு
தொடர்ந்து, குடி மைப் பணித் தேர்வில் (அய்.ஏ.எஸ்.) வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை, பூங்கொத்து நினைவுபரிசு மற்றும் பெரியாரின் சிந்தனை கள் என்ற ஆங்கில நூல் ஆகிவற்றை ஒவ்வொரு வருக்கும் அளித்து, சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி சிறப்பு செய் தனர்.
தமிழர் தலைவர் பங்கேற்பு
விழாவில், தமிழர் தலைவர் கி.வீரமணி சிறப்புரை நிகழ்த்தினார். தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் உறுப்பினரும், நாடாளு மன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான எஸ். கே.கார்வேந்தன், வார ணாசி மாவட்ட ஆட்சி யர் ரவீந்திரா அய்.ஏ. எஸ்., பேராசிரியர் சவுத் திரம் யாதவ், தேசிய பிற் படுத்தப்பட்டோர் நிதி நிறுவன முன்னாள் தலை வர் டாக்டர் பாபுராம் நிஷாத், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச் சந்திரன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கரு ணாநிதி ஆகியோர் உரை நிகழ்த்தினர். மாநில கூட் டமைப்பின் செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.
அசோகா கல்வி நிறு வனத் தலைவர் அசோக் ஆனந்த் விழா நிகழ்ச்சி நிரலை கவிதைபட சிறப் பாக தொகுத்து வழங் கினார். சிறப்பு விருந் தினர்களுக்கு விழா குழுவினர் சார்பாக சால்வை, நினைவுப்பரிசு, பெரியாரின் சிந்தனை கள் நூல் அளித்து சிறப்பு செய்யப்பட்டது.
விழாவில், அமைப் பின் உறுப்பினர்கள் குடும் பத்தினருடன் கலந்து கொண்டது மிகவும் குறிப்பிடத்தக்கது.
பல்துறையைச் சேர்ந்த அறிஞர் பெரு மக்களும் கலந்து கொண்டு, அரங்கம் நிரம்பி இருந் தது. மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 10.30 மணிக்கு நிறைவுற்ற விழாவில், இறுதிவரை அனைவரும் இருந்து கருத்துகளை கேட்டறிந் தது மிகச் சிறப்பானதா கும். வியப்பளிப்பதாக வும் இருந்தது.
காசியில் முக்கிய மான காயில் விழா நடை பெறும் அதே நாளில் இந்துச் சமூக நீதிக்கான விழா சிறப்பாக நடை பெற்றது மிகவும் குறிப் பிடத்தக்கதாகும்.
அனைவருக்கும் இரவு உணவு விருந்தும் அளிக்கப்பட்டது. (சுமார் 11 மணி அளவில்) உத்தரபிரதேச மாநி லத்தில் வாரணாசியில் நடைபெற்ற சமூக நீதித் திருவிழாவாக அமைந் ததை அனைவரும் மகிழ் வுடன் பகிர்ந்து கொண் டனர்.
ஏறத்தாழ 50 ஆண்டு களுக்குப் பிறகு, வார ணாசிக்கு வருகை தந்த - தமிழர் தலைவரின் 30 நிமிடம் உரை சமூக நீதி, பெரியாரின் உழைப்பு, அரசமைப்பு சட்டத்தின் பிரிவு, சமூக ஏற்றத் தாழ்வு என அனைத்தையும் உள் ளடக்கியதை அனைத் துப் பெருமக்களும், சிறப்பு செய்யப்பட்ட மாணவர் களும் கவனத்துடனும், மகிழ்வுடனும் கேட்ட றிந்தது விழாவின் சிறப் பான அம்சமாகும்.
தலைமையேற்று நடத்த வேண்டுகோள்!
சமூக நீதி இயக்கத் துக்கு அகில இந்திய அளவில் தலைமையேற்று வழி நடத்தித் தருமாறு திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி அவர் களை விழா ஏற்பாட்டா ளர்கள் கேட்டுக் கொண் டனர். விழாவை முன்னிட்டு, தந்தை பெரியாரின் ஆங் கில நூல்களின் விற்ப னைக் கூடம் அமைக்கப் பட்டு அனைத்து நூல் களும் விற்கப்பட்டு விட்டன.
நிகழ்ச்சி முடிந்து தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்களை விமா னம் நிலையம் வரை வந்து ரவீந்திரராம், பேராசிரியர் எஸ்.எஸ். குஷ்வாகா, டாக்டர் ஹேமேந்திர குமார் அசோக் ஆனந்த், அமிர்தான்சு, பிரசாந்த், மற் றும் விழாக்குழுவினர் பலரும்  வழியனுப்பி வைத்தனர்.