Tuesday, August 9, 2011

சமூகநீதியை நிலைநாட்ட தமிழர் தலைவரைத் தலைமையேற்க வேண்டுகோள்!

வாரணாசியில் நடை பெற்ற சமூகநீதி விழா வில், அகில இந்திய அள வில் சமூக நீதியை நிலை நாட்ட தலைமையேற்று வழி நடத்திட தமிழர் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உத்திரபிரதேச பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்க கூட்டமைப்பின் சார்பில் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று அய்.ஏ. எஸ்., அய்.பி.எஸ். பதவி களுக்கு இவ்வாண்டு தேர்வு பெற்றோருக்குப் பாராட்டு விழாவும் அதனுடன் இணைந்து தந்தை பெரியாரின் 1950 ஆம் ஆண்டு வகுப் புரிமை ஏன்? சொற் பொழிவின் ஆங்கில மொழியாக்க நூல் வெளியீட்டு விழாவும் ஆகஸ்டு 7ஆம் தேதி மாலை வாரணாசி ஓட் டல் கிளார்க்ஸ் ஆவத் மாநாடு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு காசி வித் யபீத் பல்கலைக் கழ கத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எஸ்.எஸ்.குஸ்வாகா தலைமையேற்றார். யூனியன் வங்கி அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் அமைப்பின் தலை வர் ரவீந்திரராம் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். மாநில கூட்ட மைப்பின் செயலாளர் அமிர்தான்சு அமைப் பின் பணியினையும், வார ணாசியில் இரண்டாவது ஆண்டாக பாராட்டு விழா ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதையும் குறிப்புரையாக அளித்தார்.
துவக்கத்தில் தந்தை பெரியாரின் வகுப்பு ரிமை ஏன்? ஆங்கில நூலை பேராசிரியர் எஸ்.எஸ். குஷ்வாகா வெளியிட, யூனியன் வங்கி உத்திர பிரதேச மாநில பொது மேலாளர் பி.கே.பன்சால் பெற்றுக் கொண்டார்.
வெற்றி பெற்ற அய்.ஏ.எஸ். மாணவர்களுக்கு பாராட்டு
தொடர்ந்து, குடி மைப் பணித் தேர்வில் (அய்.ஏ.எஸ்.) வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை, பூங்கொத்து நினைவுபரிசு மற்றும் பெரியாரின் சிந்தனை கள் என்ற ஆங்கில நூல் ஆகிவற்றை ஒவ்வொரு வருக்கும் அளித்து, சிறப்பு விருந்தினர்கள் பாராட்டி சிறப்பு செய் தனர்.
தமிழர் தலைவர் பங்கேற்பு
விழாவில், தமிழர் தலைவர் கி.வீரமணி சிறப்புரை நிகழ்த்தினார். தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் உறுப்பினரும், நாடாளு மன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான எஸ். கே.கார்வேந்தன், வார ணாசி மாவட்ட ஆட்சி யர் ரவீந்திரா அய்.ஏ. எஸ்., பேராசிரியர் சவுத் திரம் யாதவ், தேசிய பிற் படுத்தப்பட்டோர் நிதி நிறுவன முன்னாள் தலை வர் டாக்டர் பாபுராம் நிஷாத், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச் சந்திரன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கரு ணாநிதி ஆகியோர் உரை நிகழ்த்தினர். மாநில கூட் டமைப்பின் செயலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.
அசோகா கல்வி நிறு வனத் தலைவர் அசோக் ஆனந்த் விழா நிகழ்ச்சி நிரலை கவிதைபட சிறப் பாக தொகுத்து வழங் கினார். சிறப்பு விருந் தினர்களுக்கு விழா குழுவினர் சார்பாக சால்வை, நினைவுப்பரிசு, பெரியாரின் சிந்தனை கள் நூல் அளித்து சிறப்பு செய்யப்பட்டது.
விழாவில், அமைப் பின் உறுப்பினர்கள் குடும் பத்தினருடன் கலந்து கொண்டது மிகவும் குறிப்பிடத்தக்கது.
பல்துறையைச் சேர்ந்த அறிஞர் பெரு மக்களும் கலந்து கொண்டு, அரங்கம் நிரம்பி இருந் தது. மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 10.30 மணிக்கு நிறைவுற்ற விழாவில், இறுதிவரை அனைவரும் இருந்து கருத்துகளை கேட்டறிந் தது மிகச் சிறப்பானதா கும். வியப்பளிப்பதாக வும் இருந்தது.
காசியில் முக்கிய மான காயில் விழா நடை பெறும் அதே நாளில் இந்துச் சமூக நீதிக்கான விழா சிறப்பாக நடை பெற்றது மிகவும் குறிப் பிடத்தக்கதாகும்.
அனைவருக்கும் இரவு உணவு விருந்தும் அளிக்கப்பட்டது. (சுமார் 11 மணி அளவில்) உத்தரபிரதேச மாநி லத்தில் வாரணாசியில் நடைபெற்ற சமூக நீதித் திருவிழாவாக அமைந் ததை அனைவரும் மகிழ் வுடன் பகிர்ந்து கொண் டனர்.
ஏறத்தாழ 50 ஆண்டு களுக்குப் பிறகு, வார ணாசிக்கு வருகை தந்த - தமிழர் தலைவரின் 30 நிமிடம் உரை சமூக நீதி, பெரியாரின் உழைப்பு, அரசமைப்பு சட்டத்தின் பிரிவு, சமூக ஏற்றத் தாழ்வு என அனைத்தையும் உள் ளடக்கியதை அனைத் துப் பெருமக்களும், சிறப்பு செய்யப்பட்ட மாணவர் களும் கவனத்துடனும், மகிழ்வுடனும் கேட்ட றிந்தது விழாவின் சிறப் பான அம்சமாகும்.
தலைமையேற்று நடத்த வேண்டுகோள்!
சமூக நீதி இயக்கத் துக்கு அகில இந்திய அளவில் தலைமையேற்று வழி நடத்தித் தருமாறு திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி அவர் களை விழா ஏற்பாட்டா ளர்கள் கேட்டுக் கொண் டனர். விழாவை முன்னிட்டு, தந்தை பெரியாரின் ஆங் கில நூல்களின் விற்ப னைக் கூடம் அமைக்கப் பட்டு அனைத்து நூல் களும் விற்கப்பட்டு விட்டன.
நிகழ்ச்சி முடிந்து தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்களை விமா னம் நிலையம் வரை வந்து ரவீந்திரராம், பேராசிரியர் எஸ்.எஸ். குஷ்வாகா, டாக்டர் ஹேமேந்திர குமார் அசோக் ஆனந்த், அமிர்தான்சு, பிரசாந்த், மற் றும் விழாக்குழுவினர் பலரும்  வழியனுப்பி வைத்தனர்.

0 comments:

Post a Comment