அய்யா பிறந்த நாளில் அறிவித்தார்
அய்யா பெரியார் பிறந்த நாள் 112 ஆம் ஆண்டு
திராவிடர் போற்றி மகிழும் நாள். ஈரோட்டில் அந்நாளில் அய்யா பிறந்த நாளில்
பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டத்தில் ஆசிரியர் இரண்டு அறிவிப்புகளை வெளி
யிட்டார்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா அய்யா
பிறந்த ஈரோடு மாநகரில் எழுச்சியோடு நடைபெற்றது. காலையில் ஈரோடு பெரியார்
மன்றத்தில் தோழர்கள் ஊர்வலமாகச் சென்று அய்யா, அண்ணா உருவச் சிலைகளுக்கு
மலர் மாலைகள் அணிவித்தனர்.
இன்றைய பொதுச் செயலாளர் - அன்றைய தலைமை
கழகச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தந்தை பெரியார் சிலைக்கும், தோழர்
சீனு அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தனர். இத்தகு விழாத் தொடர்ச்சியாக இரவு 7
மணிக்குத் திரு.வி.க. சாலை நகராட்சிக் குடியிருப்பில் பல்லாயிரக்கணக்கான
பொது மக்கள் திரண்டிருந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில்தான் பிறந்தநாள் விழா
உரையில் செப்டம்பர்29 இல் நரிமணத்திலும், செப்டம்பர் 30 இல்
நெய்வேலியிலும் பெட்ரோல், நிலக்கரி ராயல்டி கேட்டுக் கழக ஆர்ப்பாட் டங்கள்
நடைபெறும் எனும் அறிவிப் பினைப் பலத்த கைதட்டல்களுக் கிடையே அறிவித்தார்.
வரலாறு மறக்காத உரிமைக் கிளர்ச்சி
திட்டமிட்டவாறு எதையும் கச்சித மாகச்
செய்து முடிக்கும், ஆர்ப்பாட்டம், ஆரவாரம் அலட்டல் ஏதுமில்லா எளிமைப்
பண்புடைய தலைமையில் நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி தர வலியுறுத்தும்
மாபெரும் ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டது. எனவே,
நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி கோரி நடக்க
விருந்த ஆர்ப்பாட்டத் திற்குத் தலைமையேற்பதற்காக 30-9-89 முற்பகல் 11 மணி
40 நிமிடங் களுக்கு ஆசிரியர் அவர்கள் நெய்வேலி விருந்தினர் மாளிகையி
லிருந்து நகரின் 17ஆம் வட்டம் அண்ணாசிலை நோக்கிப் புறப்பட்ட போது, தமிழர்
தலைவர் முன் கழகக்கொடியுடன் கூடியமோட்டர் சைக்கிள்களில் கழகத்தோழர்கள் அணி
வகுத்துச் சென்றதுடன் அவருடைய காருக்கு முன்னும் பின்னும் வெளியூர்களி
லிருந்து வருகை புரிந்த கழகத் தோழர் களின் வாகனங்கள்அணிவகுத்துச் சென்
றதுடன் திறந்த ஜீப் ஒன்றும் சென்றது.
தென் ஆர்க்காடு மாவட்டத்தின் பல
ஊர்களிலிருந்தும், கள்ளக்குறிச்சியிலிருந் தும் கழகத் தோழர்கள் ஏராளமாகப்
பங்கேற்ற போராட்டக் களம் அது. நெய் வேலியிலிருந்து அண்ணல் அம்பேத்கர்,
காமராசர், அண்ணா சிலைக்கு ஆர்ப் பாட்டத் திடலை அடையும் வழியில் தமிழினக்
காவலர் மாலையணிவிக்க எல்லா இடங்களிலும் பெரியார் வாழ்க! பேரறிஞர் அண்ணா
வாழ்க! கழகப் பொதுச் செயலாளர் வாழ்க! என முழக்கங்கள் விண்ணதிர்ந்தன.
மதியம் 12-03-க்கு அண்ணா சிலை அருகில்,
இன்றைய கழகப் பொருளாளர் - அன்றையக் கழகத் துணைப் பொதுச் செயலாளர்
வழக்கறிஞர் கோ.சாமிதுரை உரை நிகழ்த்திப் பேரணியைத் துவக்கி வைத்தார்.
கோ.சாமிதுரை அவர்கள் தொடங்கி வைத்த பேரணி
இருக்கிறதே அது சாதாரணப் பேரணி அல்ல. நெய்வேலி என்னும் ஒரு சிறிய ஊரைக்
கலக்கிய கருஞ் சட்டைப் பேரணி. ஒரு மைல் நீளம் தொடர்ந்த உரிமை முழக்கப்
பேரணி.
ஊர்வலத்தில் கையிலேந்திச் சென்ற வாசகங்கள் இன்றும் என்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய வாசகங்கள்.
* நெய்வேலி சிறக்க நிலம் கொடுத்த வர்கட்கு வேலை கொடு!
* நிலம் கொடுத்தவன் வெளியே! வடநாட்டான் நெய்வேலியிலே!
* உரிமைப் போரில் தோற்கமாட்டோம்! அடிமை வாழ்வில் சாகமாட்டோம்!
* நெய்வேலி நிலக்கரிக்கு ராயல்டி வேண்டும்!
* மின்சார உற்பத்தி இங்கே! மின்சார விநியோகம் வெளி மாநிலங்களுக்கா?
* நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை கொடு!
17 ஆவது பகுதியிலிருக்கும் அண்ணா
சிலையிலிருந்து புறப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி, நெய்வேலி நகரியத்தின் 10, 9,
2,3 ஆகிய பகுதிகளின் நெடுஞ்சாலைகள், பேரறிஞர் அண்ணா சாலை, தந்தை பெரியார்
சாலை, ஜோதி ராமலிங்கம் சாலை, உள்ளிட்ட நெடுஞ்சாலைகள் பலவற்றைக் கடக்கவே
ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகியது என்றால் எவ்வளவு பெரிய பேரணி என்பது
சொல்லாமல் விளங்கும். 1-15 மணிக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களின் தலைமை
நிர்வாக அலுவல கக் கட்டடத்தை அடைந்த பேரணியில் பங்கேற்ற கழகத் தோழர்கள்,
அலுவலகத் தலைமை அதிகாரிகளை ஆசிரியர் சந்தித்துக்கோரிக்கை மனு கொடுத்துத்
திரும்பும் வரையில் பேரணியில் ஒலித்த, * வருகிறது பார் ! வருகிறது பார்!
கருஞ்சட்டைப் பட்டாளம்!
* மத்திய அரசே! மத்திய அரசே! ராயல்டியை உடனே கொடு.
* மத்திய அரசே! மத்திய அரசே! ராயல்டியை உடனே கொடு.
* அசாமுக்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதியா?
* நெய்வேலி சிறக்க நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை கொடு!
* வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே! தமிழ் நாட்டை வஞ்சிக்காதே!
* விடமாட்டோம், விடமாட்டோம்! வஞ்சகம் தொடர விடமாட்டோம்!
* நெய்வேலி லாபத்தில் இராஜஸ் தானில் தொழிற்சாலையா?
* வேலையில்லாத் திண்டாட்டம், பஞ்சாயத் ராஜ்ய கொண்டாட்டம்/
* மாறுவோம் மாறுவோம் விடுதலைப் புலிகளாய் மாறுவோம்!
* ஊழலோ ஊழல்! பீரங்கிபேர ஊழல் - எனும்
இந்த முழக்கங்களை அவர்கள் திரும்பும் வரை வாயிலின்முன் நின்று ஒலித்தனர்.
ஊர்வலம் என்றால் இதுவல்லவோ ஊர்வலம் என்னும்படியாக இருந்தது.
கட்டுப்பாடு மிக்க, கழகத் தலைமைக்கு
என்றும் கட்டுப்பட்ட கழகத் தோழர்கள் இருவர் இருவராக அணி வகுத்து, வாசகத்
தட்டிகள், கழகக் கொடிகள் ஏந்தி வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சி.
அது மட்டுமா?
நெய்வேலிப் பகுதியிலும் ஊர்வலம் சென்ற
பாதைகளிலும் சுவரெழுத்து வாசகங்கள் எங்குத் திரும்பினாலும் எழிற் கோலம்
காட்டி வரவேற்புப் பதாகையாக வண்ண வாசகங்களாக மின்னின.
இந்தப் போராட்டம் பல்லாண்டு களாகத்
திராவிடர் கழகத்தில் சுவரெழுத்துப் பிரச்சாரம், கழக மாநாடு,
பொதுக்கூட்டங்கள் ஆகியவை வாயிலாக எடுத்து வைத்த பிரச்சாரத் தின்
முதிர்ச்சியாக விளங்கியது.
இந்தப் போராட்டம் பதிவு செய்யப்பட
வேண்டிய, தமிழகப் பொருளாதார வரலாற்றில் இடம் பெற வேண்டிய சாதனை முத்து;
ஆசிரியர் அவர்களின் சாதனை மகுடத்தில் இடம் பெறவேண்டியவைரக்கல்.
ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள்
மட்டுமே - கவனிக்க வேண்டும். கருஞ்சட்டைத் தோழர்கள் மட்டுமே, கழகக் கொடி
பறக்க, பதாகைகளை உயர்த்திக் கலந்து கொண்ட பேரணிக்குத் தளராது தலைவர் தலைமை
வகித்து 5 கி.மீ. ஊர்வலமாகச் சென்ற பேரணி இது.
அன்று நெய்வேலியில் 1. ஆளும் கட்சியான
திராவிட முன்னேற்றக் கழகம், தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் 2. தி.மு.க.வின்
பணியாளர் சங்கம். 3. அதிமுக தொழிலாளர் சங்கம். 4. இந்து மஸ்தூர் சபா.5.
அய்.என். டி.யூ.சி. 6. சனதா தளம் அதன் தொழிற் சங்கம் என்.எல்.ஓ. 7.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதன் தொழிற் சங்கம். 8. சி.அய்.டி.யு. இவைகள்
அனைத்திற்கும் நகர திராவிடர் கழகத்தின் சார்பாகப் பேரணி, அதன் நோக்கம்
குறித்து விளக்கமாகத் தெரிவித்துப் பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்
திருந்தும் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து கலந்து கொள்ளவில்லை என்பதற்கே
கட்டியம் கூறுகிறார் நகர திராவிடர் கழகத் தலைவர் நெய்வேலி செயராமன்.
இந்த ஒன்று மட்டும் போதும். அந்நாளில்
திராவிடர் கழகம் நடத்திய பேரணி எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதற்கு.
இன்னும் ஒன்றை இந்த வேளையில் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.
பேரணி நடைபெறவிருந்த 30-9-1989 அன்று மேலே
குறிப்பிட்ட அனைத்துக் கட்சிச் சங்கங்களின் நிருவாகிகள் அன்றாட சில்லரைப்
பிரச்னைகளை மய்யமாக வைத்தும், தி.க.நடத்தும் பேரணியை வலிமை குன்றச்
செய்யவும், திரு மணத்தை நிறுத்தச் சீப்பை ஒளித்து வைத்த பைத்தியக்காரி
போல், நகரின் மய்யப் பகுதியில் உண்ணா நிலை மேற் கொண்டனர். (வளரும்)
http://viduthalai.in/new/page-2/18967-2011-10-05-09-50-46.html

0 comments:
Post a Comment